Saturday, November 19, 2011

குறைந்த செலவில் காற்றாலை


அதிக மின் உற்பத்தி செய்ய .குறைந்த செலவில் காற்றாலை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையைச் சேர்ந்த காளியாப்பிள்ளை மகன் சத்தியமூர்த்தி ( 42 ) , ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர், ஒரு எளிய முறை காற்றாலையை வடிவமைதுள்ளார் .
ஆண்டு முழுவதும் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், புதிய காற்றாலையை வடிவமைதுள்ளார் . பாய்மரம் போன்ற வடிவமைப்பில் ஆறு இறக்கைகள் இந்த காற்றாலையில் உள்ளது . மரம், கம்பி, காடா துணியைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது . காற்றுவீசும் திசைக்கேற்ப காற்றாடியை திருப்பி வைத்துக்கொள்ளும் வகையில் சுழலும் அடிப்பகுதியுடன் இந்தக் காற்றாலையை வடிவமைத்துள்ளார் . குறைவான விசிறிகள், லேசான காற்றுக்கே வேகமாக சுழல்வதால் அதிக மின்சாரம் உற்பத்தி செய்வது என்பதே இவரது கண்டுபிடிப்பின் சிறப்பம்சம் .
இதனால் குறைந்த செலவில் அதிக மின்சாரம் பெறமுடியும் என்று கூறும் சத்தியமூர்த்தி, தற்போது டென்மார்க் நாட்டின் கண்டுபிடிப்பான 90 அடி விட்டமுடைய 3 இறக்கைகள் கொண்ட விசிறியே காற்றாலைகளில் பயன்படுத்தப்படுகிறது . இறக்கைகளின் அடிப்பகுதி அகன்றும் நுனிப்பகுதி குறுகியும் உள்ள இந்த அமைப்பினால் மணிக்கு 11 கிலோவாட் மின்சாரம் கிடைக்கிறது . அப்படியில்லாமல் நான் உருவாகியுள்ளபடி அடிப்பகுதி குறுகலான, நுனிப்பகுதி அகன்ற பாய்மரக் கப்பல் போன்று உள்வாங்கிய வகையில் விசிறிகளை அமைக்க வேண்டும் . அப்போதுதான் குறைந்த காற்று வீசும்பொது கூட வேகமாக சுழன்று அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் .
டென்மார்க் முறைப்படி தமிழ்நாட்டில் செயல்படும் காற்றாலை அமைக்க குறைந்தது ரூ. 10 கோடி செலவாகும் . ஆனால், எனது கண்டுபிடிப்பைப் போல் காற்றாலை அமைக்க ரூ. 2 முதல் 3 கோடி போதுமானது என்று கூறினார் .
--- தினமலர் . 1 நவம்பர் . 2010 .

No comments: