Wednesday, November 16, 2011

அதிக சுகத்தைத் தர வல்லவன் !


நீளமான தந்தத்தைக்கொண்ட ஆண் யானையை மட்டுமே தேர்ந்தெடுத்து பெண் யானைகள் கூடும் . இதனாலேயே ஆண் யானைகளுக்குள் தந்தத்தின் அளவைவைத்து ஒரு போட்டி நடைபெறுகிறது . அதேபோலத்தான் மயில் . மிக நீளமான தோகை கொண்ட ஆண் மயிலோடுதான் பெண் மயில் சேர விரும்பும் . இதனால் ஆண் மயில்களுக்குள் ' யாருக்கு நீண்ட தோகை ' என்பதில் போட்டி . இப்படி உலகின் எல்லா ஜீவராசிகளிலும் பெண்ணைக் கவர ஆண் சில பாகங்களையோ, திறமைகளையோ விளம்பரமாக வெளிப்படுத்துவதைப் போலவே, மனித ஆண்களும் தங்கள் இனப்பெருக்க உறுப்பை ஒரு வீரிய விளம்பரமாக வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள் .
இதனால், மனித ஆண் உறுப்பின் நீளம் அதிகரிக்க ஆரம்பித்தது . இன்றுள்ள வானர இனங்ககளிலேயே மனித ஆணின் உறுப்புதான் மிகவும் நீளமாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டு உள்ளது . இத்தனைக்கும் மனிதப் பெண்ணின் ஜனனக் குழாய் நீளம் என்னவோ எல்லோருக்கும் 10 செ.மீதான் . இதனுள் சென்றடைய அதே 10 செ.மீ நீளம் உள்ள கருவி இருந்தாலே போதும் . ஆனால், போட்டி என்று வந்துவிட்டால், வளர்ச்சி விகிதம் மாறித்தானே போகும் !
--- உயிர்மொழி தொடரில் டாக்டர் ஷாலினி , ஆனந்த விகடன் . 3 . 11 . 10 .

No comments: