Sunday, November 13, 2011

கறுப்பு மனிதர் !


அவர் பிறந்தது மிக சாதாரணமான குடும்பத்தில் . திருமணமான சில மாதங்களீலேயே பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாடு போகிறார் . அங்கே விடா முயற்சி , கடின உழைப்பு . கொஞ்சம் பணம் சேர்கிறது . அவர்கள் குடும்பத்தில் யாரும் கார் வாங்கியதில்லை . ' அங்கே அவர் வாங்குகிறார் . தன்னுடன் வசிக்க மனைவியை அந்த நாட்டுக்கு அழைக்கிறார் . அந்த அழைப்புக் கடிதத்தில் இப்படி எழுதியிருக்கிறார் . ' உன்னை அழைத்துப் போக ஒரு கார் வாங்கியிருக்கிறேன் . காரின் நிறம் என்ன தெரியுமா ? கறுப்பு, என்னைப் போல '. இந்த கறுப்பு மனிதர் இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த திருபாய் அம்பானி !
--- அரசு பதில்கள் , குமுதம் தீபாவளி மலர் . 3 . 11 . 2010 .

No comments: