Friday, November 4, 2011

புதிய மனிதா... பூமிக்கு வா !


சந்திராயன் -1 விண்கல கவுன்ட் டவுனின் கடைசி நொடிகள்... 99 - வது ரன்னில் சச்சின் சந்திக்கும் செஞ்சுரி பந்து... இதுபோன்ற சின்னச் சின்னா டென்ஷனையே நம்மால் தாங்க முடியாமல் போய்விடுகிறது . ஆனால், 33 உயிர்கள் ... 2,300 அடி ஆழம்... என ஒட்டுமொத்த சிலியும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க... உலகமும் அந்தப் பதைபதைப்பில் சேர்ந்து கொள்ள... அந்த 69 நாட்கள் டென்ஷனை என்னவென்று சொல்ல ?
கடந்த ஆகஸ்ட் 5 - ம் தேதி, சிலி நாட்டின் அட்டகாமா பாலைவனத்தில் இருக்கும் காப்பர் மற்றும் தங்க சுரங்கத்தில் வழக்கம்போல வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் தொழிலாளர்கள்
திடீரென சுரங்கம் சரிந்து விழ, உள்ளே இருந்த தொழிலாளர்கள் ' உயிரோடு இருந்த தொழிலாளர்கள் ' உயிரோடு சமாதி ' என முடிவுக்கு வந்தது உலகம் !
ஆனால், இருள் மட்டுமேயான நரகத்தில் மாட்டிக் கொண்டு, நம்பிக்கை இழக்காமல், அவர்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது 17 நாட்களுக்குப் பிறகு தெரிய வந்தபோது, உலகமே அதிசயித்தது ! இப்போது, 69 நாட்களுக்குப் பிறகு, புதிய மனிதர்களாக மேலே வந்திருக்கிறார்கள் 33 பேரும் !
குடும்பத்தாரின் பதைபதைப்பு, உலகத்தின் ஒட்டுமொத்த கவனிப்பு... என அந்த நிமிடங்கள் இங்கே ' பளிச் பளிச் என பதிவாகின்றன ...!
--- அவள் விகடன் , தீபாவளி மெகா ஸ்பெஷல். 5 - 11 - 2010 . இதழ் உதவி : N . கிரி , ( நியூஸ் ஏஜென்ட் - திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி .

No comments: