Sunday, October 16, 2011

பொய் மேல் பொய் .

உலகம் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிக் கடவுளிடம் புகார் செய்ய ஒருவன் சொர்க்கத்துக்குப் போனான் . ' எல்லாம் வல்ல இறைவனே ! நீங்கள் எல்லாம் அறிந்தவர் என்று எல்லோரும் கூறுகிறார்கள் . ஆனால் நீங்கள் படைத்த பூமியில் என்ன நடக்கிறது என்பதே உங்களுக்குத் தெரியாது என்று நினைக்கிறேன் . உண்மையைப் பற்றி யாருமே கவலைப்படுவது இல்லை ' என்றான் .
இதைக் கடவுள் மறுத்தார் . ' எனக்கு எல்லாம் தெரியும் . அதோ எதிரே உள்ள பலகையைப் பார் , ஒருவர் பொய் சொல்லும் போதெல்லாம் ஒரு சிவப்பு ஒளி பளிச்சிடும் . பொய் சொல்வது யார் என்பதை தெரிந்து கொள்வேன் .'
பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏராளமான சிவப்பு விளக்குகள் இடைவிடாது பளிச்சிட்டன . ' ஒரே சயத்தில் எல்லா விளக்குகளும் ஏன் பளிச்சிடுகின்றன ? ' என்று கேட்டான் அப்பாவி மனிதன் .
கடவுள் சொன்னார் , " ஓ அதுவா ? இப்போது ஆல் இந்தியா ரேடியோவில், தூர்தர்ஷன் செய்திகளைக் கேட்டிக் கொண்டிருக்கிறோம் ."
--- ' குஷ்வந்தசிங் ஜோக்ஸ் ' புத்தகத்தில் இருந்து ஆர். ஆர். பூபதி .
--- தினமணிகதிர் , மார்ச் 21 , 1993 .

No comments: