Tuesday, October 4, 2011

உயிரினங்களின் வகைகள் .

பூமியில் கோடிக்கணக்கான உயிர்கள் உள்ளன . இவற்றை வகைப்படுத்துவது கடினம் . ஆனாலும், முன்னோர்கள் உயிரினங்களை ஆதிகாலம் முதலே பகுத்துப் பார்க்க தொடங்கினர் . நமது முன்னோர்கள் செடி, கொடிகளை 4 பிரிவாகவும், பிராணிகளை 3 பிரிவாகவும் பிரித்தனர் . இதன்படி மனிதனும், பாலூட்டிகளும் ஒரு வகுப்பு . மீன், பறவை, பாம்பு ஆகிய முட்டையிடும் பிராணிகள் 2 -வது பிரிவு . 3 -வது பிரிவு தனி ரகம் என்று பிரித்தனர் .
செடிகளில் பூ உள்ளவை ஒரு பிரிவு . பூ இல்லாதவை ஒரு பிரிவு . காய்ந்தபின் வாடி அழிந்துபோகும் செடிகள் ஒரு வகை . படரும் தண்டுகளை உடையவை 4 -வது பிரிவு என்று பகுத்தனர் . புல், பூண்டு தாவரங்களை உற்றறியும் ஓரறிவு உயிரினங்களாகவும், சிப்பி, நத்தை போன்றவை இரண்டறிவு உள்ளவையாகவும், எறும்புகள், ஈசல் போன்றவை மூன்றறிவு உள்ளவை என்றும், தும்பி, வண்டு போன்றவை நான்கறிவுள்ளவை என்றும், பறவைகள், விலங்குகள் ஐந்தறிவு உள்ளவை என்றும், மனிதன் ஆறறிவு உள்ளவன் என்றும் தொல்காப்பியம் வகைப்படுத்துகிறது .
ஆனால் இந்த வகைப்படுத்துதலை விஞ்ஞானிகள் ஏற்கவில்லை . இவை செயர்கையானவை என்று கூறிவிட்டனர் . 1707 -ம் ஆண்டில் லின்னேயஸ் என்ற பிரெஞ்சு விஞ்ஞானி இயற்கையான வகைப்படுத்தும் திட்டத்தை வெளியிட்டார் . அவர் உயிகளின் உடலமைப்பு, தன்மை, இயல்புகளை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தினார் . உயிரினங்கள் முதலில் தாவரங்கள், பிராணிகள் என்று இரு மாபெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுள்ளன .
இவை இரண்டிலும் பல உட்பிரிவுகள் உள்ளன . பிராணிகளில் முதுகெலும்பு உள்ளவை, முதுகெலும்பு இல்லாதவை என்று இரு உபபிரிவுகள் உள்ளன . முதல் பிரிவில் மீன், தவளை, ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் என்று 5 பிரிவுகள் உள்ளன . அமீபா, கடற்பஞ்சி, பவளம், மண்புழு, பூச்சி, சிப்பி, நட்சத்திரமீன் ஆகியவை முதுகெலும்பு இல்லாத பிராணிகளின் பிரிவுகல் ஆகும் . இவற்றுக்குள் பல உப பிரிவுகள், குடும்பங்கள், உப குடும்பங்கள், வகுப்புகள், இனங்கள் அடங்கி உள்ளன . இவற்ரின் மிகச்சிறிய தொகுதியே இனமாகும் .
தாவரங்களில் இரு பெரும் பிரிவுகள் உண்டு . பூ உள்ளவை, பூ இல்லாதவை . பூவுள்ள தாவரங்களில் மூடிய விதையுள்ளவை, மூடாத விதை உள்ளவை என உப பிரிவு உண்டு . ஆல்கா, காளான், பாசி, பிரணி ஆகியவை பூவாத தாவர பிரிவுகள் ஆகும் .
பாலூட்டிகள் குட்டி போட்டு பால் தருபவை . ஊர்வனவற்றுள்ள பாலூட்டிகள் உஷ்ண ரத்தம் உடையவை . நுரையீரல்களால் சுவாசிப்பவை . பறவைகளும் நுரையீரலால் சுவாசிக்கின்றன . ஆனால் அவை முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை . ஒவ்வொரு பிரிவிலும் வெவ்வேறு லட்சணங்களும், பாகுபாடுகலும் உண்டு . ஆடும், மாடும் ஒரே குடும்பம் . பூனையும், புலியும் ஒரு குடும்பம் . கழுதையும், குதிரையும் ஒரே குடும்பம் . இவை பாலூட்டிகள் . இவற்றில் சைவம், அசைவம் உண்டு . என்வே நாய், பூனை, புலி இவை உறவுள்ள இனங்கள் . கழுதையும், குதிரையும் இவற்றின் தாயாதிகள் . ஆடும், மாடும் இவற்றின் உறவினர்களாகும் .
--- தினம் ஒரு தகவல் . தினத்தந்தி 30 12 . 2010 . இதழ் உதவி A சோமசுந்திரம் , ஸ்தபதியார் , திருநள்ளாறு .

No comments: