Sunday, September 11, 2011

கர்ப்பப் பை .

நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளுக்கு கர்ப்பப் பை மல்லாந்த நிலையில் இருக்கும் . அதனால், புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது . இப்படிப் படிந்துகிடக்கும் கர்ப்பப் பையினுள் மரபணுக்களைச் செலுத்தினால், அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது . ஆனால், மனிதப் பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள் . இதனால் அவள் கர்ப்பப் பையும் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு செங்குத்தாகவே இருக்கிறது . இந்த நிலையில், பெண் உடலில் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும் . அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது ?
ஆனால், இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்துக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன . கைகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்த முடிந்தது . இதனால் மற்ற மிருகங்களைவிட மிக வேகமாக முன்னேற முடிந்தது . ஆனால், கலவியின்போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை . அந்தச் சமயத்துக்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது . அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்தப் பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும் . ' அவ்வளவு நேரத்துக்கு எல்லாம் சும்மா படுத்துக்கிடக்க முடியாது .... சுத்த போர் ! ' என்று பெண் முரண்டு பண்ணினால், மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ் ! ஆக, பெண்ணை எப்படியாவது மதி மயங்கி சும்மாகிடக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கினால் ஒழிய, மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பு இல்லை .
மனித இனத்துக்கு மட்டும் இப்படி ஒரு விநோதத் தேவை இருந்ததால்தான், இயற்கை மனிதர்களுக்கு மட்டும் சில பிரத்தியேக மாற்றங்களைச் செய்துள்ளது . உதாரணத்துக்கு, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் . எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவுதான் பெண் எலிக்கும் . ஆனால், மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பது இல்லை . பருவம் அடைந்த பிறகு, மனித ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் அதிகமான ரோமம் முளைத்துவிடுகிறது . ஆக, மனிதர்களை பொறுத்தவரையில், பெண்ணுக்கு உடம்பில் முடி மிகக் குறைவு . ஏன் இந்த வித்தியாசம் ? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பன்சியில்கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாது . பெண், ஆண் இருவருக்குமே ஒரே மாதிரியான தோல்முடிதான் . மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம் ?
ரோமம் அடர்த்தியாக இருந்தால், தொடுதல் உணர்வைத் துல்லியமாகக் கிரகிக்க முடியாது . இதுவே ரோமம் குறைவாக இருந்தால், தொடுகை உணர்வு சுகமாகத் தோன்ற ஆரம்பிக்கும் . ரோமம் குறைவான மனிதப் பெண்ணின் தோலைத் தொட்டுத் தடவி, வருடி, மென்மையாக உரசினால் போதும் . அவளது நரம்புகளில் மின்சாரம் அதிகமாகப் பாய்ந்து, மூளை கிளர்ச்சிக்கு உள்ளாகும் . அவள் மதி மயங்கி நீண்ட நேரத்துக்கு அரைத் தூக்கத்தில் படுத்தேகிடப்பாள் . இந்த அவகாசத்துக்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் வம்சம் விருத்தியாகுமே !
---' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 1 . 12 . 2010 .

No comments: