Wednesday, September 7, 2011

டிப்ஸ்...டிப்ஸ்...

* மாடர்ன் கிச்சன் வைத்திருப்பவர்கள், சிம்னியை ஆறு மாதத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் . இல்லாவிடில் சிம்னியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு எளிதில் தீப்பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு .
* தலைவலி அதிகமாக இருக்கும்போது, ஒரு பென்சிலை எடுத்து மேல்வரிசை பற்களுக்கும், கீழ் வரிசை பற்களுக்கும் இடையில் வைத்து பிடித்துக் கொண்டால், தலைவலி குறையும் , பென்சிலை அழுத்த வேண்டாம் .
* பச்சையாக இருக்கும் ஒருவகைப் பூச்சி நம்மீது பட்டாலோ, நம்மையும் அறியாமல் தொட்டாலோ அருவருக்கத்தக்க ஒரு நாற்றம் அடிக்கும் . அதைப் போக்க சிறிது விபூதியை எடுத்து தடவிக் கொண்டால் போதும் . நாற்றம் மறைந்து விடும் .
* மாவடு செய்தால், சில நாட்களிலேயே பூஞ்சை பிடித்து விடுகிறது . வடுமாங்காய் தயாரித்து ஒரு வாரம் கடந்தபின், அந்த நீரை வடிகட்டி கல் சட்டியில் விட்டு, சுண்டக் காய்ச்சி மீண்டும் ஜாடியில் ஊற்றி, வடுமாங்காய்களைப் போட்டு வைத்தால் பூஞ்சை பிடிக்காது .
* சின்ன வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு மூன்று மணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்து, பிறகு நறுக்கினால் கண்ணில் எரிச்சல் வராது .
* குளிர்க்காலத்தில் ஸ்வெட்டர்களைக் கையால் துவைக்கும்போது, ஷாம்பு போட்ட நீரில் ஊறவைத்துத் துவைத்தால் பளிச்சென்று இருப்பதுடன், கரையில்லாமல் வாசனையாகவும் இருக்கும் .
* ஃப்ளாஸ்க் அழுக்கடைந்து காணப்படுகிறதா ? வெந்நீரில் சிறிது உப்பைக் கரைத்து அதை ஃப்ளாஸ்கில் ஊற்றி, அரைமணி நேரம் ஊறவிடவும் . பிறகு வேறு நீரால் கழுவினால் ஃப்ளாஸ்க் சுத்தமாகி பளிச்சென இருக்கும் .
* இடுப்பு வலியால் அவதிப்படுகிறீர்களா ? தலையனை, மெத்தை எதுவும் இல்லாமல் உடம்பைத் தளர்வாக வைத்துக் கொண்டு தரையில் 20 நிமிடம் படுத்திருங்கள் . இதனால் இடுப்பு வலியும் வராது , கூன் முதுகும் விழாது .
* இரவில் தூக்கமில்லையா ? ஒரு வாழைப்பழத்தை உரித்து, ஒரு டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகத்தை தொட்டுக் கொண்டு இரவு சாப்பிட்டு வர ஆனந்தமான தூக்கம் வரும் .
* மிக்ஸி ஜார்களை அரைத்தவுடன் அதிக நேரம் சிங்கில் போடக் கூடாது . அரைத்ததும் ஜார்களை உடனே அலசி தனித்தனியே கவிழத்து வைத்து உலரவிட வேண்டும் . அப்படிச் செய்தால் நீண்ட நாள் உழைக்கும் .
* தேனை, மண், பீங்கான், கண்ணாடிப் பாத்திரங்களில் வைப்பதே சிறந்தது
* இருமல் பாடாய்படுத்துகிறதா ? இலுப்பக் கரண்டியில் நெய்விட்டு உருகியவுடன் சில மிளகுகளைப் பொடி செய்து அதில் பொரித்துச் சாப்பிட்டால் இருமல் போய்விடும் .
--- மங்கையர் மலர் . நவம்பர் 2010 . இதழ் உதவி : N .கிரி , ( நியூஸ் ஏஜெண்ட் , திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி ..

No comments: