Saturday, September 3, 2011

கொலு காட்சி !.

கொலு காட்சியில் 9 படிகள் வைக்கிறார்கள் .
முதல் படியில் ஓரறிவு உயிர்ப்பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகளை வைக்க வேண்டும் .
2 வது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகளை வைக்க வேண்டும் .
3 வது படியில் மூவறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றன்றவைகளையும்,
4 வது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களான நண்டு, வண்டு போன்ற பொம்மைகளையும்,
5 வது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள், பறவைகள் போன்றவைகளையும் ,
6 வது படியில் ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளையும்,
7 வது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகள் பொம்மைகளையும்,
8 வது படியில் நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்ட திக்கு பாலகர்களின் பொம்மைகளையும்,
9 வது படியில் பிர்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளையும் அவர்களின் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியொருடன் ஆதிபராசக்தியை நடு நாயகமாக வைக்க வேண்டும் .
--- தினமலர் .அக்டோபர் 22 . 2010 ..

No comments: