Thursday, September 1, 2011

ஐஸ்வர்யா ராய் .

ஐஸ்வர்யா ராய் பச்சன்... அபார அழகு தேவதை ! தகுதியும் திறமையும் அழகாகச் சங்கமித்த ஹைக்கூ கவிதை . பசையாக இழுக்கும் பச்சைக்கண்கள்தான் இன்று உலக அழகின் உச்சம் !
* மங்களூரில் 1973 - ம் வருடம் நவம்பர் 1 - ம் தேதி பிறந்தார் . பெற்றோர்கள் கிருஷ்ணராஜ் ராய் மற்றும் விருந்தா ராய் . ஒரு ஒரு அண்ணன் ஆதித்யா ராய் !
* தேர்ந்த ஆர்க்கிடெக்ட் ஆக வேண்டும் என்பது தான் ஐஸ்வர்யாவின் லட்சியம் . ஆனால், ஆர்க்கிடெக்ட் படிக்கும்போதே, மாடலிங் வாய்ப்புகள் குவிய, அழகு புயல் அப்படியே திசை திரும்பிவிட்டது .
* 1994 ' மிஸ் இந்தியா ' போட்டியில் சுஷ்மிதா சென் அழகிப் பட்டம் வென்றார் . அதில் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது இடம் . அதே வருடத்தில், உலக அழகிப் போட்டியில் இன்னும் தைரியம், நம்பிக்கை சேர்த்து கலந்துகொண்டார் ஐஸ் . உலக அழகிப் பட்டத்தோடு மிஸ் போட்டோஜெனிக் பட்டமும் ஐஸ் வசம் !
* ஐஸ்வர்யாவின் 21 - வது பிறந்த நாள் பரிசாகக் கிடைத்தது ' உலக அழகிப் பட்டம் '! அழகி கிரீடம் சூடிய உடன், அரங்கில் இருந்து அனைவரும் தத்தமது மொழிகளில் ' பிறந்த நாள் வாழ்த்து ' பாடிய பெருமை இவரைத் தவிர, வேறு அழகிகளுக்குக் கிடைக்கவில்லை !
* ' மற்ற நாட்டுப் போட்டியாளர்கள் ' இந்தியர்களைப் படிப்பறிவு இல்லாதவர்கள் . துளியும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் ' என்று மட்டம் தட்டிக்கொண்டே இருப்பார்கள் . அதைப் பொய்யாக்கும் வேகம்தான் உலக அழகிப் பட்டம் பெற எனக்கு உத்வேகம் ஏற்படுத்தியது !' என போட்டிகளில் அடிக்கடி குறிப்பிடுவார் ஐஸ்வர்யா !
* மாடலிங் நாட்களில் இருந்தே ஐஸ்கிரீம் தவிர்ப்பவர் . நாள் ஒன்றுக்கு எட்டு டம்ளர் தண்ணீர், கொஞ்சம் உடற்பயிற்சி, காய்கறி மற்றும் பழங்கள்தான் ஐஸின் ஃபிட்னெஸ் ரகசியம் !
* இளவரசி டயானாவுக்குப் பிறகு காதல், திருமணச் செய்திகளுக்காக பத்திரிகையாளர்கள் அதிகமாகப் பின் தொடர்ந்தது ஐஸ்வர்யாவை என்கிறார்கள் !
* கர்னாடகம் மற்றும் ஹிந்துஸ்தானி சங்கீதத்தை முறையாகக் கற்றவர் தொடர்ந்து பரத நாட்டியமும் கற்றுக்கொண்டார் . சினிமாக்களில் ஐஸ்வர்யாவின் பரத அசைவுகள் அனைத்தும் சொந்த் முனைப்புதான் !.
* 17 ஆயிரம் வெப்சைட்டுகள் ஐஸ்வர்யாவுக்காகத் தங்கள் தலத்தில் பிரத்யேக இடம் ஒதுக்கி இருக்கிறது . இவருக்கு அடுத்தபடியாக அதிக பக்கங்களை ஆக்கிரமித்து இருப்பவர் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் !
* 2004 -ல் ' டைம்ஸ் ' பத்திரிகை, உலக அளவில் மக்களை ஈர்த்த 100 அழகுப் பெண்களில் ஐஸ்வர்யாவையும் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது !
* 2005 - ல் பர்பி நிறுவனம், இங்கிலாந்தில் ஐஸ்வர்யா ராயைப் போல் தோற்றம்கொண்ட பர்பி பொம்மைகளை விற்பனைக்கு வெளியிட்டது . ஒரே நாளில் எல்லா பொம்மைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன . இன்றும் அந்த கலெக் ஷன் பொம்மைகளுக்கு ஏக டிமாண்ட் உண்டு !
* லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் மெழுகு மியூசியத்தில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண் மெழுகு சிலை, அழகுச் சிலை ஐஸ்வர்யாவினுடையதுதான் !
* ' குரு ' பட ஷூட்டிங் சமயம், ஹோட்டல் லாபியில் ஐஸ் நின்றுகொண்டு இருந்தார் . கையில் ஒற்றை ரோஜாவோடு வந்து அப்போது காதலைச் சொன்னார் அபிஷேக் பச்சன் .தன்னைவிட, மூன்று வயது இளையவரான அபிஷேக் பச்சனுக்கு உடனே ஓ. கே . சொல்லிவிட்டார் ஐஸ்வர்யா ராய் !
* எத்தனையோ விளம்பரங்கள், சினிமாக்களில் உடல் மறைக்கும் நகைகள் அணிந்து நடித்து இருந்தாலும், தங்கத்தின் மீது ஒரு துளிகூட விருப்பம் இல்லாதவர் !
* தன் நீலம் கலந்த பச்சை விழிகளே தனது இத்தனை புகழுக்கும் காரணம் என்று நம்புகிறார் ஐஸ்வர்யா !
---இர.. ப்ரீத்தி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

No comments: