Wednesday, August 31, 2011

நரகம் நிரந்தரம் அல்ல !

* '' சஞ்சித கர்மா, பிராரப்த கர்மா, ஆகாம்ய கர்மா என கர்மாக்கள் மூன்று வகைப்படும் . அவற்றை முற்றிலுமாக அனுபவித்து, இனி அனுபவிக்க ஏதுமில்லை என்ற நிலையை அடைபவர்களுக்கு பூமியில் மறுபிறவி வாய்ப்பது இல்லை ! ' என்கிறது கடோபநிஷத் * மறுபிறவி சாத்தியம் என்பதற்கு உலகில் வாழும் ஆதாரங்களாகக் காட்டப்படுவது புத்த மதக் குருக்களான தலாய் லாமாக்களைத்தான் . தலாய் என்றால் கடல் . லாமா என்றால் குரு . கடலளவு விஷயங்களைக் கற்றுக் கொடுப்பவர் என்று பொருள் . ஒரு தலாய் லாமா இறந்த பிறகு, அவரது ஆன்மா மறுபடியும் பிறக்கும் ' என்பது தலாய் லாமாக்களின் நம்பிக்கை . * .ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு மனிதனுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமலேயே அவனால் அந்தப் புது மொழியைப் பேச முடிந்தால், அதற்கு ' ஸெனோக்ளாஸி ' என்று பெயர் . உதாரணமாக, ஜெர்மன் மொழி கற்றிடாத அல்லது ஜெர்மனுக்கு ஒருமுறைகூடச் சென்றிடாத, ஜெர்மன் மொழி பேசுபவர்களைக்கூட அறிந்திடாத ஒருவர் ஜெர்மன் மொழியைச் சரளமாகப் பேசினால் அவரைத்தான் ' ஸெனோக்ளாஸ் ' என்கிறர்கள் . ' ஸெனோ ' என்றால் அந்நியம் , ' க்ளாஸி ' என்றால் மொழி அல்லது நாக்கு என்று அர்த்தம் . இப்படி உலகம் எங்கும் நிறைய ஸெனோக்ளாஸ்கள் இருக்கிறார்கள் . --- ஜென்மம் விகடன் இணைப்பு . 14 . 4 . 10 .

No comments: