Monday, August 29, 2011

மனித , மிருக கலவி !

மிருக கலவிக்கும், மனித கலவிக்கும் பல முக்கியமான வித்தியாசங்கள் உண்டு . எல்லா மிருகங்களும் முகமே பாராமல்தான் கூடிப் புணரும் . அதுவும் இனப்பெருக்க காலத்தில் மட்டும், எந்தவித சுகமும் உணராமல், வெறுமனே குட்டி போட மட்டும் நடக்கும் ஒரு உப்புச்சப்பு இல்லாத சம்பிரதாயமாக இருக்கும் . ஆனால், முகம் பார்த்து, இன்னாருடன் உறவுகொள்கிறோம் என்று அறிந்து, பருவ காலம் மட்டும் அல்லாமல், தனக்குப் பிடிக்கும்போது எல்லாம் ஆசைக்காக உறவுகொள்ளும் தன்மை, இந்த உலகில் இரண்டே ஜீவராசிகளுக்குத்தான் உண்டு . ஒன்று, மனிதன் . இன்னொன்று, பொனோப்போ . நடத்தையிலும் மரபுகளிலும், இத்தனை ஒற்றுமை இருக்கிறது என்றால், மரபு அணுக்களில் ? பரிசொதனை செய்துபார்த்தால் ஆச்சர்யம் . ஆனால், உண்மை . பொனோப்போக்களின் மரபு அணுப்புரதங்கள் 98 சதவிகிதம் மனிதர்களைப்போலவே இருப்பதைக் கணக்கிட்டார்கள் விஞ்ஞானிகள் . ஆக, மரபு அணுரீதியில் பார்த்தால் மனிதர்களும், பொனோப்பொக்களும் சகோதர இனங்கள் . இவற்றுக்குள் இனக் கலப்பு செய்தால், குழந்தைகள் பிறக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது . ஆனால், இதை எல்லாவற்றையும்விட மிகப் பெரிய ஆச்சர்யம் என்ன தெரியுமா ? இந்த பொனோப்போக்கள் இன்றும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன . இவை மட்டும் அல்ல; நமக்கு அடுத்து நெருங்கிய சகோதர இனமான சிம்பன்சிகளும் தாய்வழி சமூக அமைப்பில்தான் வாழ்கின்றன . அப்படியானால், மனிதர்களும் ஆரம்ப காலத்தில் தாய்வழி சமூக முறையைத்தான் கடைபிடித்து இருப்பார்கள் என்றுதானே அர்த்தம் ! -- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 20 . 10 . 10 .

No comments: