Monday, August 8, 2011

ஞாபக மறதி நோய் !

மூளையில் மின் அதிர்வு கொடுத்தால் ஞாபக மறதி நோய் குறையும் . மின்சாரம் மூலம் மூளையில் அதிர்வை ஏற்படுத்தினால் ஞாபக மறதி நோய் குறையும் என்று பிலடெல்பியாவில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் . ஞாபக மறதி நோய் உள்ளவர்களுக்கு மின்சாரம் மூலம் மூளையில் அதிர்ச்சி ஏற்படுத்தினால், அதன் உள்ளே இருக்கும் எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்கள் தூண்டப்படும் . இதன் மூலம், மறந்துபோன பதிவுகள் மீண்டும் மூளைக்கு வரும் . தனது பெயரே மறந்துபோகும் நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மின்சார சிகிச்சை மிகவும் பயனுடையதாக இருக்கும் . ஞாபக மறதி ஏற்படுவதற்கு நியூட்ரான்கள் பலவீனமாக இருப்பதுதான் காரணம் . இந்த பாதிப்பு முதுமையில்தான் ஏற்படுகிறது . இதைத்தவிர்க்க, சுமார் 1 முதல் 2 மில்லி ஆம்ஸ் மின் அதிர்வு கொடுத்தால் அவர்களின் மூளையில் ஆண்டிரியர் என்னும் பகுதி தூண்டப்படுகிறது . இதனால் அவர்களின் நியூட்ரான்கள் செயலாக்கம் பெற்று மீண்டும் சிறப்பாக செயல்படுகிறது . இதனால் நோயாளிகளுக்கு ஞாபக மறதி பாதிப்பு 11 சதவிகிதம் குறைகிறது என்று ஆய்வுத்தகவல் சொல்கிறது .ஆனால், இந்த மின் அதிர்வை எத்தனை முறை கொடுக்கவேண்டும் என்ற தகவலை ஆய்வாளர்கள் தெரிவிக்கவில்லை . --- தினமலர். அக்டோபர் 13 , 2010

No comments: