Saturday, August 6, 2011

மூன்று முடிச்சு !..

மூன்று முடிச்சின் பொருள் : தெய்வ பக்தியுடன் தெய்வசங்கல்பத்திற்கு உட்பட்டு வாழ்தல், பெற்றோருக்குக் கட்டுப்பட்டிருத்தல், கணவனுக்கு அடங்கி வாழ்தல் ஆகிய மூன்று பண்புகளையும் கொண்டவளாக ஒரு பெண் இருத்தல் வேண்டும் . இந்த கருத்தை தான் திருமணத்தின்போது அணிவிக்கப் பெறும் ' மாங்கல்யத்தின் மூன்று முடிச்சுகள் ' உணர்த்துகின்றன . அதனால்தான் மூன்று முடிச்சுகள் இடுகிறார்கள் . திருமாங்கல்ய சரடு ஒன்பது இழைகளை கொண்டது . இந்த ஒன்பது இழைகளும், ' காயத்திரி மந்திரத்தை ' குறிப்பிடுகிறது . அவைகள் : 1 . வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே புரிந்து கொள்வது . 2 . ஆற்றல், 3 . மேன்மை, 4 . தூய்மை, 5 . தெய்வீக நோக்கம், 6 . உத்தமகுணங்கள், 7 . விவேகம், 8 . தன்னடக்கம், 9 . தொண்டு அல்லது சேவை . ஆகியவற்றை ஒரு பெண் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அமையப் பெற்றவை ஆகும் . --தினமலர். அக்டோபர் 31 , 1993 .

No comments: