Sunday, July 24, 2011

மூப்பு வேகமாக நெருங்கும் !

அடுக்குமாடியில் வசிக்கிறீர்களா ? . மூப்பு வேகமாக நெருங்கும் ! புவிஈர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு உருவான, ' குவாண்டம் தியரி 'யை அடிப்படையாக வைத்து இங்கிலாந்தை சேர்ந்த கொலராடோ நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற அமைப்பு, புவிஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் பொருட்கள் குறித்து ' கிராவிடேஷனல் டைம்டைலேஷனல் ' என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது . இந்த ஆய்வில், புவிஈர்ப்பு விசைக்கு எதிராக இயங்கும் பொருட்கள் தரை மட்டத்தில் இயங்குவதைவிட, உயரமான இடத்தில் வேகமாக இயங்குவதை கண்டுபிடித்தனர் . அதாவது தரைதளத்தில் உள்ள குடியிருப்பில் வைக்கப்பட்ட ஒரு கடிகாரத்தை 100வது மாடியில் உள்ள குடியிருப்புக்கு கொண்டு சென்று வைக்கும்போது அந்த கடிகாரம் தரையில் இருந்தபோது ஓடிய வேகத்தைவிட அதிக வேகமாக ஓடுவதை கண்டுபிடித்தனர் . இதுபோலவே விமானம், செயற்கைகோள் என அனைத்து சாதனங்களின் இயக்கமும் புவியின் ஈர்ப்பு விசையை விட்டு விலகிச் செல்ல செல்ல அந்த பொருட்களின் செயல்வேகம் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர் . புவிஈர்ப்பு விசையை விட்டு ஒரு பொருள் விலகிச் செல்லும் போது அதன் செயல்வேகம் அதிகரிப்பதை போலவே, புவியின் தரை மட்டத்தைவிட்டு உயரே செல்ல செல்ல மனிதன் மூப்படையும் வேகமும் அதிகரிக்கிறது . இதனால் 150 மாடி கட்டடம் ஒன்றில் ஒத்த வயதுடையவர்களில் ஒருவர் தரைதளத்திலும், மற்றொருவர் 150 வது மாடியிலும் வசித்தால், தரை தளத்தில் இருப்பவரைவிட மேல் தளத்தில் இருப்பவர் விரைவில் மூப்படைந்துவிடுவார் . ஆனால், வாழ்நாளில் எந்த குறைவும் ஏற்படுவதில்லை . எனவே மக்கள் எவரும் அஞ்ச வேண்டாம் . ---தினமலர் .27 . 9 . 2010 .

1 comment:

க. சந்தானம் said...

வலையகம் அவர்களே ! என் பதிவினை உங்கள் தளத்தில் இணைக்க எனக்குத் தெரியவில்லை . மன்னிக்கவும் . நன்றி !