Friday, July 22, 2011

பிறப்பின் அதிசயம் .

அந்தக் கூடலின் இறுதி மூச்சில் , ஆண்பெண் உறவின் அதிசயம் மலர்ந்தது ! அவளது கருவறை யுள்ளே அவனின் அணுக்களின் பந்தயம் ! ! கோடிகள் ஓடின ! ! ! அவற்றில் ஒன்றே ஒன்று வென்றிட ! மற்றவை மாண்டன மறைந்தன ! ! ஒன்றும் ஒன்றும் இணைந்ததும் ஆணென பெண்ணென ஒன்றென அதனின் மேலேன ஒன்றிட கருவறைக் கதவும் மூடியே விடவும் கண்ணிலான் உளம்போல் நீண்டதொரு அமைதி ! ஈரேழு நாட்கள் ! இருண்ட குகையுள் ஒரு மின் மினி பூச்சியாய் கருவறையில் ஒறுஒளி ! உருவைப் படைக்குமுன் இறைவன் உயிரை முதற்கண் படைத்திட ! அங்கே கோட்டையுள் கோட்டையாய் கருவறையுள் அடி கோல் முற்றுப் பெறுகின்றது ! ! கருவாய் ! கடுகினும் சிறிதாய் ! ! குறைமதி நிலவாய் கருவறைத் திருவாய் ! இரண்டு திங்களில் நாளொடும் பொழுதொடும் வளரும் நிலையாய் நிறையுரு நோக்கிய நீண்ட பயணம் . முந்திரி பழத்தின் விதையின் தோற்றம் உருமுன் தலையும் வடிவுற ! ஒன்பது கிழமையில் மூளையும் வடிவம் பெற்றிட கழிந்தன ! ! " நீரோன் " எனும் உயிர்அணு அலை நொடிக்கு நாளாயிரம் மூளையினுள் குடிபுக ! நிறைமூன்று தைங்களில் மூச்சு விடும்நிலை ! நான்கு திங்களில் கண்கள் அசை கின்ற நிலை ! ஆறு திங்களில் முழுமைப் பெற்றிட நரம்பு நாளங்கள் வளர்ந்து , நன்னுயிர் உடலும் ஒன்றென் ராயின ! ! ---எம். கே. எம். அபூபக்கர் . கருவறை முதல் கல்லறை வரை .நூலில் . நூல் உதவி : செல்லூர் கண்ணன்

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சூப்பர்...

க. சந்தானம் said...

கவிதை வீதி . சௌந்தர் . அவர்களுக்கு , நன்றி !