Wednesday, July 20, 2011

ஆங்கில அடிவருடிகள் !

இவர்கள் ஆங்கில அடிவருடிகள் !
தமிழகத்தில் திராவிட கலாச்சாரம் பரவத் தொடங்கியதும் கூடவே வெறுப்புணர்வும் விதைக்கப்பட்டது . திராவிட இயக்கத்தினருக்கு தமிழ் மொழி மீது அப்படி ஒன்றும் பற்று கிடையாது என்பதை தீர்மானமாகச் சொல்லலாம் .
இந்திய வானொலி அமைப்பு தமிழகத்தில் மட்டுமே ' ஆல் இண்டியா ரேடியோ ' ஆக இருக்கிறது . மற்ற மாநிலங்களில் அது ' ஆகாஷ்வாணி ' என்று இருக்கிறது . இந்தி வேண்டாம், ஆங்கிலமாக இருக்கட்டும் என்று முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன் பேரில் மத்திய அரசு இணங்கி இருக்கிறது .
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக அகில இந்திய வானொலி நிலையமாக இருந்தது . சுதந்திரம் பெற்ற பிறகு ' ஆகாஷவாணி ' என்ற பெயர் சூட்டப்பட்டு, நாடெங்கும் வானொலிப் பெட்டிகளில் அந்தச் சொல் ஒலித்தது .
அன்றைய மைசூர் சமஸ்தானத்தில் ' ஆகாஷவாணி ' என்ற பெயரில் ஒரு வானொலி நிலையம் இயங்கியது . அந்தப் பெயரைத்தான் இந்திய அரசு பெற்று செயல்பட தொடங்கியது . ஆகாஷவாணி என்பது கன்னட மொழிச்சொல் . அதாவது, திராவிட மொழிகளில் ஒன்றான கன்னட மொழிச்சொல் அது . அந்தச் சொல் கூடாது ' ஆல் இண்டியா ரேடியோ ' என்று ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்று அதிபுத்திசாலியான திராவிட இயக்கத்தினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மத்திய அரசு எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது .
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, இந்த ஆல் இண்டியா ரேடியோ ஒன்றே திராவிட இயக்கங்களின் தமிழ்மொழிப்பற்றை எடுத்துச் சொல்லும் .இவர்களுடைய மோசமான, ஆபாசமான கொள்கையால், தேசம் முழுவதும் மற்ற மக்கள் இந்தி அறிந்திருக்க, தமிழக மக்களுக்கு அப்படி ஒரு நலன் கிட்டாமல் போய்விட்டது . இன்றும் திராவிட இயக்கத்தினர் தங்களை ஆங்கில அடிவருடிகள் என்பதை நிரூபித்து வருகின்றனர் . செம்மொழி மாநாடு என்பது எல்லாம் வெறும் நாடகமே .
--- ம.ந. ராமசாமி , கோவை தினமலர் .. 24 . 9 . 2010 .

No comments: