Sunday, July 17, 2011

நீரிழிவு நோயாளிகளுக்கு !

நீரிழிவு நோயாளிகளுக்கு -- ஓர் ' இனிப்பான ' செய்தி !
ஒரு நீரிழிவு நோயாளியின் உடலில் உள்ள இரத்தத்தில், சர்க்கரையின் அளவு என்ன என்று அறிய இதுவரை இரத்தப் பரிசோதனை செய்து கண்டறிந்தோம் . மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில வயதான நோயாளிகளுக்கு ஒரே நாளில் நான்கு அல்லது ஐந்து முறைகூட இந்த இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டி உள்ளது . இனி நீரிழிவு நோயாளிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே, தாங்களாகவே வலியற்ற முறையில் இந்தப் பரிசோதனையைச் செய்து கொள்ள முடியும் .
இண்ட்க்ரிடி அப்ளிகேஷன்ஸ் ( Integirty Applications ) என்று ' இஸ்ரேல் ' நாட்டில் உள்ள ஒரு நிறுவனம், நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைத் துல்லியமாக அறிய, ' க்ளுகோ ட்ராக் ' ( Gluco Track ) என்ற க்ளூகோ மீட்டரை, பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகு வெற்றிகரமாக தயாரித்துள்ளது .இந்த க்ளூகோ மீட்டருடன் ' இயர் ஃபோன் ' போன்ற ஒரு சிறிய கருவி இணைக்கப்பட்டுள்ளது . இந்தக் க்ளிப்பை நம் காதில் பொருத்திக்கொண்டால், நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை நாமே க்ளூகோ மீட்டர் மூலம் துல்லியமாக அறியலாம் . ஒரே சமயத்தில் மூன்று பேர் பொருத்திக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது .
ஐரோப்பிய நாடுகளில் இந்த ஆண்டு இறுதியில், மார்க்கெட்டில் புழங்க உள்ள இந்த ' க்ளூகோ மீட்டரு ' க்கு இப்பொழுதே ஏகப்பட்ட கிராக்கி .
--- ஆதாரம் : இணைய தளம் . ( CERS ). ஆர். பாண்டுரங்கன் , அகமதாபாத் . மங்கையர் மலர் . அக்டோபர் 2010 . இதழ் உதவி : N கிரி ,( நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ) கொல்லுமாங்குடி

No comments: