Friday, July 15, 2011

தாளம் !

தாளம் என்றால் வெறுமனே இஷ்டத்துக்குத் தட்டுவது அல்ல; முதலில் தொடையில் உள்ளங்கையால் ஒரு தட்டு . பிறகு ஒன்று, இரண்டு, மூன்று என்று எண்ண வேண்டும் . அடுத்து, தொடையில் உள்ளங்கையால் தட்டி, பிறகு கையைப் புரட்டிப் போட்டுத் தட்டவேண்டும் . இதையே இரண்டு முறை செய்தால், ஒரு சுற்று முடிந்தது . 1 + 3 + 2 + 2 ஆக, இந்த ஒரு சுற்று எட்டு நிலைகளைக்கொண்டது . இது ஆதி தாளம் . ஏகம், ரூபகம், த்ரிபுட, ஜம்ப, மட்ய, அட, துருவ என்று தாளங்களில் ஏழுவகை உள்ளன .
ஆதி தாளத்தை சதுஸ்ர ஜாதி திரிபுடை தாளம் என்பார்கள் . ஜாதி என்றால், வகை . திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீர்ணம் என்று ஐந்து ஜாதி . இதற்கு அடுத்து ஐந்து நடைகள் . ஆக, 7 x 5 x 5 = 175 வகைகளில் தாளம் செய்ய முடியும் . சங்கீதத்தில் 35 வித அலங்காரம் உள்ளதாம் .
----' மனம்கொத்திப்பறவை ' தொடரில் , சாரு நிவேதிதா . ஆனந்த விகடன் , 29 .9 . 10 .

No comments: