Saturday, July 9, 2011

ஆண்களில் ஐந்து வகை !

ஆல்ஃபா , பீட்டா , காமா , டெல்டா , ஒமேகா .ஆண்களில் ஐந்து வகை !
தொல்காப்பியர் ஏன் அப்படி எழுதினார் ? அடிமையாக இருப்பவன் பாட்டுக்குத் தலைவனாக, அதாவது, ஹீரோவாக இருக்க முடியாது என்று ஒரு விதியை அவர் முன்வைக்க காரணம் என்ன ? சிம்பிள்.... சுயசிந்தனா சக்தியும் சுதந்திரமும் இல்லாதவன், ஏவல் செய்ய மட்டுமே லாயக்கானவன் . இப்படிப்பட்டவணை ஆண்களும் மதிக்க மாட்டார்கள், பெண்களும் காதலனாகவோ, கணவனாகவோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .
.உலகில் உள்ள எல்லாப் பெண்பாலின் உயிரினங்களுக்கும் ஒரு பொது சுபாவம் உண்டு . அவை எல்லாமே தலைமைக் குணங்களைக்கொண்ட உயர் அந்தஸ்து ஆல்ஃபா ஆண்களைத்தான் இனப்பெருக்கத்துக்காக தேர்வு செய்கின்றன . தன் வாழ்வைச் சுயமாக நிர்ணயிக்க முடியாத அடிமை நிலையில் இருக்கும் ஒமேகா ஆண்களைப் பெண்கள் ஒரு பொருட்டாகக் கருதுவதே இல்லை . இதில் ஒரு பெரிய மரபணுவியல் சூட்சுமமே இருக்கிறது . சமூகக் கூட்டங்களாக வாழும் யானை, குரங்கு, ஓநாய் மாதிரியான விலங்குகளில் என்னதான் நாம் எல்லோரும் ஒரே தரம் என்று சமத்துவம் பேசினாலும், இவற்றுக்குள் ஒரு சமூக அடுக்கு நிலை Social hierarchy இருக்கத்தான் செய்கிறது . அதிக பவர் இருக்கும், பேரந்தஸ்து பெருந்தகை, ஆல்ஃபா என்கிற தலைமைப் பதவியை வகிக்கும் . அதற்கு அடுத்த அந்தஸ்தில் இருக்கும் பீட்டா, காமா, டெல்டா வகையறாக்கள்.... மந்திரி, செயலாளர் மாதிரியான நிலைகளை நிரப்பும் . இந்த எல்லா நிலைகளுக்கும் கீழே மிகக் குறைவான சமூக அந்தஸ்தில் இருக்கும் ஒமேகா, ஏவலுக்குக் கட்டுப்பட்டு இருக்கும் .
--- ' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் , 6 .10 . 10 .

No comments: