Friday, July 8, 2011

விலங்குகளில் ஆண் -- பெண் !

எல்லா விலங்குகளுக்கும் ஆண், பெண் பெயர் உண்டு . நாம் அதையெல்லாம் மறந்து விட்டு பொதுப் பெயரில் சொல்லிக்கிட்டு இருக்கோம் . நம்ம தொன்மையான நூலான தொல்காப்பியத்தின் மரபியல் பகுதியில் இதைப் பற்றி விரிவாக சொல்லப்பட்டிருக்கு .
ஆண் எருமை, ஆடு, மாடுகளை ' கடா ', ' பகடு ' என்று சொல்லணும் . செம்மறியாட்டுக்கு ' தகர் ', குரங்கு, முயலுக்கு ' கடுவன் ', புலிக்கு ' போத்து ', மானுக்கு ' கலை ', எருமைக்கு ' ஏறு ', வாத்துக்கு ' வரடம் ', கரடி, பன்றி, யானை, புலி ஆகியவற்றுக்கு ' ஒருத்தல் ', குதிரைக்கு ' மா ' என்று ஆண்பால் பெயர்கள் உள்ளன .
பெண் ஒட்டகம், யானை, கவரிமானுக்கு ' பிடி ', கழுதைக்கு ' பேடை , பெட்டை ', குரங்குக்கு ' மந்தி ', எருமைக்கு 'ஆ ', பன்றிக்கு ' மோழல் ', ஆடுக்கு ' மூடு ', வாத்துக்கு ' வாத்து ', தேனீக்கு ' அரசி ', மயிலுக்கு ' அலகு ' என்று பெண்பால் பெயர்கள் உள்ளன . பொதுவாக பெண்பால் விலங்குகளுக்கு ' பிணா ', ' பிணவு ' என்று பயன்படுத்தலாம் .
இளம் ஆடு, பூனை, நாய், கழுதை, குதிரை, கரடியை ' குட்டி ' என்றும், இளம் மாடு, எருமை, முதலை, ஒட்டகம் ஆகியவற்றை ' கன்று ' என்றும், ஒட்டகம், யானையை ' கயத்தலை ',
' மினி ', ' களவம் ' என்றும், இளம் கீரியை 'பிள்ளை ' என்றும், இளம் அணிலை ' வெருகு ', ' நாவி ' என்றும், இளம் குரங்கை ' குழலி ', ' குட்டி ' என்றும் அழைக்கலாம் . பொதுவாக இளம் விலங்குகள், அன்னத்தையும் ' பறழ் ' என்று அழைக்கவேண்டும் என்று தொல்காப்பியம் சொல்கிறது .
--- தினமலர் , அக்டோபர் 1 . 2010 .

No comments: