Tuesday, July 5, 2011

கள்ளம் இல்லை !

மழை நினைத்தால் .
வறண்ட பூமி
வரம் பெறும் ,
வளம் பெறும்
உருண்ட பூமி
உரம் பெறும் ,
உணவு பெறும் .
விளை நிலம் ,
வீரியம் பெறும் ,
வேலையின்மை விடைபெறும் .
வனம் காடு
கனம் பெறும் ,
வனவிலங்கு மகிழுறும் .
அணை ஆறு
நிறைவு பெறும் ,
அகிலம் சுகம்பெறும் .
இன்றோ மழையால்....
ஏழ்மை என்பது
ஏற்றம் பெறுகிறது
இல்லாமை நிலைபெறுகிறது
நகர் வாழ்வு
நலிவு பெறுகிறது
நலமின்மை நலம்
பெறுகிறது
விடிவுண்டு இதற்கு
மழைநீர்
விரைந்தோட வழிவிடுவீர் .
அதன் போக்கில்
சுவர் எழுப்பும்
தடைவேண்டாம் .
ஆறு , குளம்
ஏரி , நிலம் எதிலும்
வீடு வேண்டாம் .
வெள்ளப் பெருக்கில்
கள்ளம் இல்லை
கடலோடி மறைந்திடுமே !
--- பெ . மாடசாமி, காவல்துறை உதவி ஆணையாலர் , வடபழநி . குமுதம் சிநேகிதி,. அக்டோபர் 1 -- 15 , 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent -- Thirunallar ) கொல்லுமாங்குடி

No comments: