Sunday, June 19, 2011

ஹெலிபிளேன் .

ரன்வே இல்லாமல் டேக் ஆஃப். லேண்டிங் செய்யக் கூடிய நவீன ஹெலிபிளேனை வடிவமைத்து, நாசா நடத்திய போட்டியில் வென்றிருக்கிறார்கள் நமது சென்னை மாணவர்கள் .
ஹெலிகாப்டர்களைப் பொருத்தவரை, மிகக் குறைந்த அளவு சரக்கு மற்றும் மனிதர்களைத்தான் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல முடியும் .
எனவே, இதற்குத் தீர்வு காண பல வருடங்களாக நாசா ( National Acronautics and Space Administration ) முயற்சித்து வருகிறது . இது தொடர்பான போட்டிகளையும் நடத்தி வருகிறது . மீட்புப் பணிகளுக்கு உதவக்கூடிய வானூர்திகளை வடிவமைக்கும் போட்டி ( tiltrotor design competition 2009 -- 2010 ) ஒன்றினை மாணவர்களுக்காக கடந்த ஆண்டு நடத்தியது . மேனிலைப்பள்ளி அளவில் அல்லது கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்துகோள்ளலாம் . அமெரிக்கர்களுக்கு, அமெரிக்கர் அல்லாதவர்களுக்கு என்று இருவேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது .
உலகெங்கும் இருந்து அமெரிக்கா, கனடா, நைஜீரியா, இங்கிலாந்து, ஆஸ்திரியாவென பல்வேறு பல்கலைக்கழகங்களில் இருந்தும் மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள் . இப்போது நாசா தனது இணைய தளத்தில் போட்டி முடிவுகளை அறிவித்திருக்கிறது . அமெரிக்கரல்லாதோர் பிரிவில் இடம் பெற்றிருப்பது சென்னை, ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுவின் வானவூர்தி வடிவமைப்பு .
" இது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் . போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருமே உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியல்களில் இருப்பவர்கள் ".என்கிறார் குழு உறுப்பினரான பெர்னார்ட் அடைக்கலராஜ் . மற்றும் மனோஜ் என்ற சக தோழர் . நாசாவின் முடிவுக்குப் பிறகு இந்த வடிவமைக்குக் காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள் .
நம் நாட்டில், மீட்புப் பணிகள், ராணுவம், கப்பற்படை, விமானப்படை போன்ற பணிகளுக்கு இந்தப் புதுரக வானவூர்தியைப் பயன்படுத்தலாம் .
---புதிய தலைமுறை . 30 செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N.கிரி , ( News Agent - Thirunallar ) கொல்லுமாங்குடி

No comments: