Thursday, June 9, 2011

அந்த ஏழு கடல்கள் !

ஐரோப்பிய இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஏழு கடல்கள் , ' பாரசீக வளைகுடா, கருங்கடல், காஸ்பியன் கடல், செங்கடல், மத்தியதரைக் கடல், அட்ரியாடிக் கடல், அரபிக் கடல் ஆகியவை .
அரேபியர்களின் ' ஆயிரம் இரவு ' கதைகளின்படி, ' அரபு நாட்டில் இருந்து சீன தேசத்துக்குப் போக பாரசீக வளைகுடா, கம்பத் வளைகுடா, வங்காள விரிகுடா, மலாக்கா ஜலசந்தி, சிங்கப்பூர் ஜலசந்தி, தாய்லாந்து வளைகுடா, தெற்கு சீனக் கடல் ஆகிய ஏழு கடல்களைக் கடந்துதான் செல்ல வேண்டும் என்ற குறிப்பு காணப்படுகிறது
காலனி ஆதிக்கச் சமயத்தில் ஐரோப்பியர்கள் கீழை நாடுகளான இந்தோனேஷியாவைத் தேடி வந்தபோது, பாண்டா கடல், செலிபஸ் கடல், ஃப்ளோர்ஸ் கடல், ஜாவா கடல், தெற்கு சீனக் கடல், சுலூ கடல், டைமோர் கடல் போன்ற ஏழு கடல்கள் வழியாகத்தான் வந்தார்களாம் ..
நவீனயுகத்தில் வட, தென் அட்லான்டிக் பெருங்கடல்கள், வட, தென் பசிபி பெருங்கடல்கள், இந்தியப் பெருங்கடல்கள், அண்டார்டிக் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல்கள் ஆகிய ஏழு பெருங் கடல்களையே பிரதான கடல்கள் என்கிறார்கள் .
---பா. முருகானந்தம் , . கடல் விகடன் , இணைப்பு - 9 / 12 / 2009

No comments: