Monday, June 6, 2011

எம்.எஸ். விஸ்வநாதன் .

இரண்டு தலைமுறைக்கு இசையில் நம்மைத் தாலாட்டிய எம்.எஸ். வி - யின் இசைக்கு இன்னும் இருக்கிறார்கள் லட்சக்கணக்கான ரசிகர்கள் .
கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928 ஜூன் 17 ல் பிறந்தவரின் அன்புக்கு உகந்த ஜானகி அம்மாள் என்ற மனைவி . கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள் . லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள் . ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை !
உலக இசையைத் தமிழில் புகுத்தி எளிமைப்படுத்திய பெருமை இவருக்குத்தான் . எகிப்திய இசையைப் ' பட்டத்து ராணி ' பாடலும் , பெர்சியன் இசையை ' நினைத்தேன் வந்தாய் நூறு வயது 'விலும் , ஜப்பான் இசையைப் ' பன்சாயி. காதல் பறவை 'களிலும் , லத்தீன் இசையை ' யார் அந்த நிலவிலும் ', ரஷ்ய இசையைக் ' கண் போன போக்கிலே கால் போகலாமா 'விலும் , மெக்சிகன் இசையை ' முத்தமிடும் நேரமெப்போ ' பாடலிலும் கொண்டுவந்தார் !
' நெஞ்சில் ஓர் ஆலயம் ' படத்தில் இடம்பெற்ற ' முத்தான முத்தல்லவோ ' பாடல்தான் 20 நிமிஷங்களில் இவர் இசைக்கோர்ப்பு செய்த பாடல் . ' நெஞ்சம் மறப்பதில்லை ' பாடல் உருவாகத்தான் இரண்டு மாதம் ஆனது !
--- நா. கதிர்வேலன் . ஆனந்த விகடன் . 22 . 9 . 2010.

No comments: