Saturday, May 21, 2011

கார் திருட்டு !

கார் திருட்டை கண்டுபிடிக்க புதுகருவி .
எப்படித் திருடிக்கொண்டு போனாலும் காரே அதன் உரிமையாளர்களுக்கு காட்டிக்கொடுக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி சந்தைக்கு வந்துவிட்டது . டிகாப் என்ற செல்போன் தொழில்நுட்ப அடிப்படையிலான இந்த கருவியை பெங்களூரைச் சேர்ந்த ஐ டிரான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது . இந்த கருவியின் செயல்பாடு குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மல்லேஸ் ரெட்டி கூறியதாவது : டிகாப் கார் திருட்டு கருவியை செல்போன் சிம்கார்டுடன் இணைத்து செயல்பட வைக்கிறோம்
கார் திருடு போனாலோ, காரின் கண்ணாடியை உடைத்தாலோ, கார் கதவை அழுத்தி தொட்டாலோ அதுபற்றி உடனே எஸ் எம் எஸ்ஸில் உரிமையாளருக்கு இந்த கருவி தகவல் தந்துவிடும் . அதைப் பார்த்த உடன், அபாய சமிக்ஞை செய்யும்படி அதே எஸ். எம் . எஸ்சில் மறு தகவல் அனுப்பினால் கார் குய்யோ முறையோ என்று கத்தி ஊரைக்கூட்டிவிடும் . இதனால் திருடன் கையும் களவுமாக பிடிபட்டுவிடுவான் . இந்த எஸ். எம். எஸ் சேவைக்காக வோடபோன் நிறுவனத்துடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம் . அதுபோல கார் உரிமையாளர் அனுமதி இன்றி அவரது உறவினர்கள் வண்டியை எடுத்துச் சென்றாலும் இதேபோல எஸ்.எம்.எஸ். எச்சரிக்கை தகவல் வரும் . திருடு போன கார் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்துக்கொள்ளலாம் . அத்துடன் கார் காணாமல் போனதில் இருந்து 72 மணி நேரம் வரை அது சென்ற பாதை பற்றிய முழுதகவலையும் பெறமுடியும் . கார்களுக்கு மட்டுமல்ல பள்ளி வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கும் இந்த கருவியை பொருத்திக்கொள்ளலாம் . இந்த கருவியின் அறிமுக விலை 7 ஆயிரம் ரூபாய் . இவ்வாறு மல்லேஸ் ரெட்டி கூறினார் .
--- தினமலர் .12 . 9. 2010 .

No comments: