Friday, May 13, 2011

ஓசோன் படலம் காப்போம் !

ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உடைய வாயு . அது நீல நிறத்தில் , நெடியுடன் இருக்கும் . இது வளி மண்டலத்தில் புவியைச் சுற்றிலும் 60 கிலோமீட்டருக்கு மேலே , 3 மில்லிமீட்டர் தடிமனில் உள்ளது . இந்தப் பகுதியைத்தான் ஓசோன் படலம் என்கிறார்கள் .
சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் , உயிரினங்களுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை . இவற்றால் வெப்பமும் அதிகரிக்கும் . இந்தக் கதிர்கள் புவியை அணுகவிடாமல் தடுத்து ஓசோன் பாதுகாக்கிறது .
நாம் பயன்படுத்தும் வேதிப்பொருட்களில் இருந்து வெளியேறும் வாயுக்கள் மேலே செல்லும் .அவை ஓசோனுடன் கலக்கும்போது நடக்கும் ரசாயன மாற்றங்களால் ஓசோன் அளவு குறைந்து ஓசோன் படலத்தில் இடைவெளி ஏற்படும் . இதைத்தான் ஓசோன் படல ஓட்டை என்கிறார்கள் .
இந்த ஓட்டைகள் வழியாக சூரியனின் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவும்போது , பூமியில் உள்ள மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு உடல்நலக் கேடுகள் அதிகரிக்கும் .
பாதிப்புகள் .
ஓசோனை அழிக்கும் வாயுக்களால் , அண்டார்டிகா பகுதியின் மீதான ஓசோன் படலத்தில் 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது . இதுபோல் , ஆர்டிக் பகுதியின் மீதான ஓசோன் படலத்திலும் பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது .
நைட்ரஜன் மோனாக்சைடு , நைட்ரஜன் டையாக்சைடு , குளோரின் போன்றவற்றோடு தலைச் சாயம் , நறுமணப்பொருட்கள் , ப்ரிட்ஜ் , ஏசி போன்றவற்றில் குளிர்விக்க உதவும் குளோரோஃபுளோரோ கார்பன் போன்றவைதான் ஓசோன் படலத்தை கிழித்துவரும் நச்சு வாயுக்கள் .
---. தினமலர் / 11 . 9 . 2010.

2 comments:

துளசி கோபால் said...

உண்மைதான். எங்க நாட்டில் தோல் புற்றுநோய் இதன் காரணமாகவே அதிகம்:(


வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிருங்களேன். அதான் மாடரேஷன் இருக்கே!

க. சந்தானம் said...

அன்பு துளசி கோபால அவர்களுக்கு, உங்கள் நாட்டிலும் தோல் புற்று நோய் இதன் காரணமாகவே அதிகம் . என்று சொல்லியுள்ளீர்கள் . அதற்காக எனது வருத்தத்தை தெரிவிக்கிறேன்