Saturday, April 23, 2011

ஜோக்ஸ் ஹிய்...ஹிய்...

* " காதலுக்கும் , கள்ளக்காதலுக்கும் என்ன வித்தியாசம் ? "
" காதல் பண்ணி வெளியே தெரிஞ்சா கல்யாணப்பத்திரிகைல பேர் வரும் . கள்ளக்காதல் பண்ணி வெளியே தெரிஞ்சா எல்லா பத்திரிகையிலேயும் பேர் வரும் ."
* " என்னைக் காதலிக்கும்போது நொடிக்கு 100 தடவை தேவயானி... தேவயானின்னு பாசமா கூப்பிட்டுகிட்டிருந்தவர் , கல்யாணமானதும் அப்படியே மாறிட்டார்டி ."
" எப்படி ? "
" இப்பல்லாம் ' தேவையா நீ... தேவையா நீ...ங்கிறார்டி ! "
-- குமுதம் , 8 / 9 / 2010.
* "' Tea ' க்கும் ' Coffee ' - க்கும் என்ன வித்தியாசம் ? "
" தெரியலியே ... ! "
" ' Tea ' - ல ஒரு ' e ' இருக்கும் . ' Coffee ' - ல இரண்டு ' e ' இருக்கும் . அதனால பார்த்துக் குடிங்க ... "
* " என்ன சார் , என் பொண்ணு கிளாமரா வரலேன்னு திட்டினீங்களாமே ? "
" நாசமா போச்சு , நான் அவளுக்கு கிராமர் வரலேன்னு திட்டினேன் ."
* " நீங்க மணிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்துல கார் ஓட்டுவீங்க ? "
" யார் அது மணி ? அவனுக்கெல்லாம் நான் கார் ஓட்றதில்லே "
* ஒரு ஊர்ல அப்படி , இப்படின்னு இரண்டு பேரு .
ஒருநாள் அப்படி " எப்படி இருக்கிங்க "ன்னு கேட்டார் .
இப்படி , " எப்படியோ இருக்கேன் "னாரு.
" இப்படி சொன்னா எப்படி ! அப்படி இருக்கேன் . இல்ல இப்படி இருக்கேன் " ன்னு சொல்லுங்கன்னாரு .
உடனே இப்படிக்கு அப்படி ஒரு கோபம் . " நான் எப்படி இருந்தா உனக்கென்னனு சொல்ல நினைச்சாலும் நீ எப்படி கேட்ப ? "
இது எப்புடி ? ( செம்.... ம கடி ...)
-- மங்கையர் மலர் .செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N. கிரி , ( News Agent Thirunallar ) கொல்லுமங்குடி
* " உன்னைக் கட்டிக்கிட்டதுக்குப் பதிலா , ஒரு கழுதையைக் கட்டியிருக்கலாம் ! "
" நல்ல வேளை... நீங்க அப்படிச் செய்யலை , நெருங்கிய சொந்தத்துல பொண்ணு கட்டறது தப்புங்க ! "
---. ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .

No comments: