Thursday, April 14, 2011

இயற்கை உபாதை !

இயற்கை உபாதைகளை அதிக நேரத்துக்கு அடக்கி வைப்பதால்.....
" சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உந்துதலை முதல் முறை உணர்ந்த உடனேயே சிறுநீர் கழித்து விட வேண்டும் . ஒரு வேளை அப்போது செல்லாவிட்டாலும் அடுத்த நான்கு மணி நேரத்துக்குள் கண்டிப்பாக சீறுநீர் கழிக்க வேண்டும் .
அதன் பிறகும் பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளது . தொடர்ந்து இப்படியே நடந்தால் சிறுநீர்ப்பை தனது செயல் திறனை இழந்து விடுகிற அபாயமும் இருக்கிறது .
அதுபோலவே குறித்த நேரத்தில் மலம் கழிக்கத் தவறுவது தொடர்ந்தாலும் மலக்குடல் இறக்கம், பைல்ஸ் போன்ற பிரச்னைகள் வரலாம் ".
--- ஸ்ரீகலா பிரசாத் , மகப்பேறு மருத்துவ நிபுணர் . சென்னை . அவள் விகடன் , 14 / 03/ 2008 .

No comments: