Monday, April 11, 2011

ரத்ததானம் சில உண்மைகள் !

* 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம் .
* சராசரியாக ஒருவரின் உடலில் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கும் . ரத்த தானத்தின்போது 300 மில்லிலிட்டர் ரத்தத்தைதான் எடுப்பார்கள் .
* தானம் செய்யும் ரத்தமும் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரத்திற்குள் நம் உடலில் ஊறிவிடும் .
* ரத்த தானத்திற்கு பிறகு ஓய்வு, ஸ்பெஷல் உணவு எதுவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை .
* ரத்தம் கொடுப்பவர்கள் இரண்டு நாட்களுக்குள் எந்த மருந்தும் சாப்பிட்டு இருக்க கூடாது .
* ரத்தம் கொடுப்பவர் குறைந்தது மூன்று ஆண்டுகளாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருக்க கூடாது .
* ரத்த தானம் செய்பவருக்கு ரத்தசோகை, ரத்த அழுத்தம், எய்ட்ஸ் போன்ற நோய்கள் இருக்க கூடாது என்பது முக்கியமான கண்டிஷன் .
--- தாரணி, எடமலைப்பட்டிபுதூர் . தினமலர் . ஜனவரி 9 . 2010.

1 comment:

Simulation said...

இரத்த தானம்

http://simulationpadaippugal.blogspot.com/2005/08/blog-post_21.html