Friday, April 8, 2011

ரயில் பயணங்களின் போது...

எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும்போது என்னதான் விழிப்பு உணர்வோடு இருந்தாலும் மயக்க பிஸ்கெட் தந்து கொள்ளை அடிப்பது, கத்தி முனையில் நகைகளை பறிப்பது, குடித்து சக பயணிகளுக்கு தொல்லை கொடுப்பது போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடிவதில்லை .
இதுபோன்ற நேரங்களில் உதவுவதற்காகவே ரயில்வே நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் . ' ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே 9962500500 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு, நீங்கள் பயணிக்கும் ரயிலின் பெயர், பெட்டி மற்றும் இருக்கை எண்ணை குறிப்பிட்டு, உங்களுக்கு நேர்ந்த ஆபத்தையும் சொன்னால் போதும், அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் இருக்கும் போலீஸ் அதிகாரியே , உங்களுக்கு உதவ வருவார் என்பதுதான் அவர்களின் திட்டம் .
திட்டமிட்டபடி இந்த லைஃப் லைன் செயல்பட வேண்டிக் கொள்வோம் !
--- அவள் விகடன் ,18 / 01 / 2008

No comments: