Friday, April 1, 2011

தெரியுமா ? தெரியுமே !

* பால் வழக்கத்தை விட கெட்டியா தெரியறதுக்காக யூரியா நியூட்ரலைசர்ங்கிற ரசாயனத்தைக் கலக்குறாங்க .
* தொலைதூர ஊர்கள்லருந்து பால் விநியோகம் நடக்குறதால, பால் திரியறதைத் தள்ளிப்போட சோடியம் பை கார்பனேட் சேர்க்கப்படுகிறது .
* துவரம் பருப்பில் கலக்கிறதுக்காகவே வட இந்தியாவிலேர்ந்து கேசரி பருப்புங்கிற ரகத்தை வரவழைக்குறாங்க .
--- குமுதம் , 1. 9. 2010.
* இப்போது ஒரு சிரிய வீடு கட்டவே முறுக்கு கம்பிகள் தொடங்கி சிமென்ட் வரை பயன்படுத்துகிறோம் .ஆனால், தஞ்சை பெரிய கோயிலோ, பாறைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியே கட்டப்பட்டிருக்கிறது . பூசுவதற்கு சாந்து பயன்படுத்தப்படவே இல்லை . புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை, குன்றாண்டார் கோயில் ஆகிய இரண்டு ஊர்களில் இருந்த மலைகலை உடைத்து பெயர்த்துக் கொண்டுவந்து கட்டப்பட்டதுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள் .
--- தினமலர், ஆகஸ்ட் 29 , 2010.
* சோப் தாயாரிக்க தாவர் எண்ணெய் மாதிரியான இயற்கையான பொருள்களைத்தான் பயன்படுத்துவாங்க . ஆனா, டிட்டர்ஜென்ட் அப்படியில்லை . பெட்ரோலியம், செயற்கைக் கொழுப்பு, தார்... இப்படி செயற்கைப் பொருள்களால் ஆனது .
--- அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .

No comments: