Thursday, March 31, 2011

காஷ்மீரில்....?

என்ன நடக்கிறது காஷ்மீரில் ?
காஷ்மீரில் நடப்பது வெறுமனே இந்து - முஸ்லீம் பிரச்னையோ, இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையேயான இடம்பிடிக்கும் போட்டியோ அல்ல ; அதன் வேர் இந்தியப் பிரிவினையில் இருந்து தொடங்குகிறது . காஷ்மீரில் பெரும்பகுதி முஸ்லீம் இருந்தபோதிலும் சுதந்திரத்தின்போது ஹரிசிங் என்ற இந்து மன்னர்தான் காஷ்மீரை ஆண்டு வந்தார் .அவர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ காஷ்மீரை இணைக்க மறுத்தார் . அந்த நிலையில் பாகிஸ்தானின் பஸ்தான் பழங்குடி மக்கள் காஷ்மீர் மீது படை எடுத்தனர் . அதை சமாளிக்க முடியாத ஹரிசிங், நேருவுடன் ஒப்பந்தம் போட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தார் . இப்படித்தான் காஷ்மீர் இந்தியாவுக்கு வந்தது . பின்னர் படிப்படியான நிகழ்வுகளின் காரணமாக அரசியல் சட்டத்தில் 370 - வது பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டு காஷ்மீருக்கு சுயாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது . இந்த இணைப்பில் மிக முக்கியமான அம்சம் என்பது ' காஷ்மீர மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் ' என்பதுதான் . ஆனால், இன்று வரை அப்படி ஓர் ஓட்டெடுப்பு நடத்தப்படவில்ல . நேருவும் அதன் பின் வந்த யாருமே அந்த ஓட்டெடுப்பு நடத்த துணியவே இல்லை . காஷ்மீரில் சின்னச் சின்னதாக இயக்கங்கள் தோன்றி ' சுதந்திர காஷ்மீர் ' கேட்டு ஜனநாயக வழியில் போராடத் தொடங்கினார்கள் . 50 ஆண்டுகள் ஜனநாயகப் போராட்டத்தில் வெறுப்புற்று 1980 -களின் பிற்பகுதியில் போராட்டம், ஆயுத வடிவம் எடுத்தது . காஷ்மீரின் போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பதாலும், அவர்கள் முஸ்லீம்கள் என்பதாலும் சுதந்திரமாக அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதக் குழுக்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது பாகிஸ்தான் . அதன்பிறகு போராட்டம், தீவிரவாத முகம் எடுக்க ஆரம்பித்தது . அந்த அழகிய பள்ளத்தாக்கு படிப்படியாக ரத்தப் பிரதேசம் ஆன கதை இதுதான் .
பெரும்பகுதி காஷ்மீர் முஸ்லீம்கள் பாகிஸ்தானுடன் இணைவதை விரும்பவில்லை . இரு தரப்பும் முஸ்லீம்கள்தான் என்றாலும் அடிப்படையிலேயே வேறுபாடு இருக்கிறது . பாகிஸ்தானின் முஸ்லீம்கள் ஷன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் . காஷ்மீரின் முஸ்லீம்கள் ' குஃபி ' வகையைச் சேர்ந்தவர்கள் . தங்களைத் தனித்த தேசிய என வகைப்படுத்தும் காஷ்மீரிகள் ' சுதந்திர காஷ்மீர் ' கேட்கின்றனர் . இதை பாகிஸ்தானோ, இந்தியாவோ இதுவரை கண்டுகொள்ளவில்லை .
--- ஆனந்தவிகடன் , 25. 8. 2010.

No comments: