Thursday, March 24, 2011

பஞ்சபூத சக்தி !

நோய் துரத்தும் பஞ்சபூத சக்தி !
நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் ஆகிய பஞ்சபூத சக்திகள் உடலில் சரிவர இணைந்திருந்தால் நோய்கள் அணுகாது .
இதற்கு இயற்கை மருத்துவத்தில் உள்ள ஒரு சுலப வழி :
நெல்லி ( நில சக்தி ) 600 கிராம், மிளகு ( நீர் சக்தி ) 500 கிராம், கடுக்காய் ( தீ சக்தி ) 400 கிராம், மஞ்சள் ( வாயி சக்தி ) 300 கிராம், வேப்பவித்து ( ஆகாய சக்தி ) 200 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும் . கடுக்காயில் விதையை நீக்கிவிட வேண்டும் .
இந்த ஐந்தையும் அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம் .
நூறு மில்லி பசும்பாலில் இந்த பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவில் கலந்து காய்ச்ச வேண்டும் . இது இளம்சூடாக இருக்கும்போது தலையில் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும் . ஷாம்பு, சிகைக்காய் பயன்படுத்தக்கூடாது .
வாரம் ஒரு முறை இதைப் பின்பற்றினால், உடலில் பஞ்சபூத சக்தி நிறைந்து ஆரோக்கியம் பெருகும் !
--- தினமலர் .22 . 8 . 2010.

No comments: