Sunday, March 20, 2011

தலைக்கு டை !

தலைக்கு டை அடித்தால் நரைமுடி மேலும் அதிகரித்துவிடும் என்று சொல்ல்கிறார்கள் .
" டை அடித்தால் நரை முடிகள் அதிகமாவது மட்டுமல்ல, இன்னும் பல ஆபத்துக்களும் அதில் உள்ளன . டை என்பது முடிகளுக்கான வெளிப்பூச்சு அல்ல.... முடிகளின் வேரைச் சென்று அதன் மூலம் இரத்தத்தில் கலந்து ஒவ்வொரு உறுப்புக்களுக்கும் விஷத்தன்மையைப் பரப்பும் பேராபத்தையும் ஏற்படுத்தக்கூடிய விஷமி . டைகளில் கலந்துள்ள PPD என்கிற இரசாயனம் சிறுநீரகப்பை புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது .
நாம் தலைமுடிக்கு டை அடித்த சில நிமிடங்கள் கழித்து நமது சிறுநீரைப் பரிசோதித்தால் டைகளில் உள்ள விஷத் தன்மைகள் அதில் அப்பட்டமாக வெளிப்படுகிறது என்பதை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபித்துள்ளன .
எவ்வளவு நவீன ' டை 'யாக இருந்தாலும் அதனால் முடிகளுக்கு மட்டும் இன்றி மொத்த உடம்புக்கும் கேடு என்பது தவிர்க்கவே முடியாதது .
டைகள் வெள்ளைகளை மட்டுமின்றி ஆரோக்கியமான கறுப்பு முடிகளின் ஃபோலிக்கில் என்று சொல்லப்படும் வேர்களையும் விஷமாக்கி, எல்லா முடிகளின் ஆரோக்கியத்தையும் அழித்துவிடுகின்றன . அதனால்தான் டை அடிப்பவருக்கு திடீரென வெள்ளை முடிகள் அதிகரித்தது போல் தோன்றும் . கூடவே முடிகள் கொட்டுவதும் அதிகமாகும் ."
---இளையரவி , தகவல் தமயந்தி . குமுதம் 25 . 8. 2010.

2 comments:

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு..

Unknown said...

வேடந்தாங்கல் - கருன் அவர்களுக்கு ! பயனுள்ள பதிவு என்று சொல்லியுள்ளீர்கள் . நன்றி !