Sunday, March 13, 2011

ப்ராணாயாமம் .

பூஜையில் ஈடுபடும்போது மனம் ஒருமைப்படுவது அவசியம் . மனம் ஒருமைப்பட ப்ராணாயாமம் உதவுகிறது . புறத்தே மூச்சினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அகத்தே ப்ராணசக்தியை நம் கட்டுக்குள் கொண்டு வர முயல்வதே ப்ராணாயாமம் .
ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கிக் கட்டைவிரல் மோதிர விரல்களால் மூக்கை இருபுறமும் தொட்டுக்கொண்டு வலது பக்கம் அழுத்தி இடது பக்கம் மெதுவாக மூச்சை இழுத்துப் பின் இருபுறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக மூச்சை விடவேண்டும் .
உள் இழுப்பது ' பூரகம் , ' நிறுத்துவது ' கும்பகம் ', வெளிவிடுவது ' ரேசகம் ' எனப்படும் . பூரக - கும்பக - ரேசகத்தின் கால அளவை 1 ; 3 ; 2 என்ற விகிதத்தில் இருத்தல் சிறந்தது . பூரக - குமபக - ரேசக மூன்றும் சேர்ந்தது ஒரு ப்ராணாயாமம் .
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே
என்ற திருமூலர் வாக்கினை உய்த்து உணரவும் .
--- எளிய ஆகம பூஜா முறை , என்ற நூலில் ஆர். பி. வி. எஸ். மணியன் . நூல் உதவி : K. S. மாதவன் , நெற்குன்றம் . சென்னை .107 .

2 comments:

சமுத்ரா said...

நன்றி

க. சந்தானம் said...

அன்பு சமுத்ரா ! நன்றி !