Wednesday, March 9, 2011

உஷார் ரிப்போர்ட் !

எமனாகும் காய்கறிகள் .
பசுக்களின் பால் உற்பத்தியைப் பெருக்க ஊசி போடப்படுவது உண்டு . பெயர்... ' ஆக்சிடோஸின் ' தெரியும் . தெரியாதது ! அதே ஊசி காய்கறிகளுக்குப் போடப்பட்டு மனிதர்களுக்கு கண்ணி வெடியாக மாறுகிறது என்பதுதான் .
' ஆக்சிடோஸின் ' ஒரு ஹார்மோன் . குழந்தைப் பேற்றின் போது, பெண்களின் கருப்பை சுருங்கவும், அதன் வாய் விரிவடையவும் ' ஆக்சிடோஸினை ' ஊசி மூலம் உடலுக்குள் செலுத்துவார்கள் . இதன் மூலம் குழந்தைப் பேற்றில் சிரமம் இருக்காது. ஆனால், காய்கறிகளுக்கு ' ஆக்சிடோஸின் ' போடுவது எப்படி ? எதனால் ? பிரபல பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவரிடம் பேசினோம் .
" ஊசி வடிவில் இருக்கும் மருந்தை செடிப் பருவத்தில் அல்லது காயாக மாறுவதற்கு முன்பே உள்ளே செலுத்திவிடுவார்கள் . அதனால் இலை, தண்டு, பூ... உள்ளிட்ட உறுப்புகளின் வளர்ச்சி அமோகமாய் இருக்கும் .
ஒரு விஷயம் தெரியுமா ? ' ஆக்சிடோஸின் ' ஒரு சில நாடுகளில் தடை செய்யப்பட்ட ' ஷெட்யூல் - ஹெச் ' மருந்து.டாக்டர் சிபாரிசு இல்லாமல் கிடைகாது . கொடுக்கக் கூடாது . நுண்ணிய குப்பிகளில் ( ஆம்ப்யூல் ) அடைத்து விற்க வேண்டும் என்பது விதி . ஆனால், வியாபார ரீதியில் மிகச் சிறிய பிளாஸ்டிக் குடுவைகளிலும் அடைத்து 15 ரூபாய்க்கு கூட விற்கப்படுது . பசுக்கள் அல்லது காய்கறிச் செடிகளின் உள்ளே ' ஆக்சிடோஸினை ' செலுத்துவதற்கு தொழில்நுட்ப ஞானம் தேவையில்லை . யார் வேண்டுமானாலும் மருந்தைக் கையாள முடியும் .
சரி ! ஆக்சிடோஸின் நிறைந்த காய்கறிகள் உண்பதால் உடலில் பாதிப்பு வருமா ?
" செடிகளுக்கு உடலியங்கு தன்மை இல்லை என்பதால் உள்ளே செலுத்திய ' ஆக்சிடோஸின் ' வெளியேறாது . மாறாக உள்ளேயே தங்கிவிடும் . இதனால் காய்கறிகளில் ரசாயனத் தன்மை அதிகரிக்கும் . அத்தகைய காய்கறிகளை நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்வதால் தலைவலி முதல் மூளை நரம்பு வரை பாதிப்புகள் ஏற்படும் ஆபத்து உண்டு ! " என்கிறார் பிரபல குடல் நோய் நிபுணர் டாக்டர் மாறன் , எச்சரிக்கை கலந்த குரலில் !
--- எஸ் . அன்வர் , குமுதம் 18. 8 . 2010.