Sunday, March 6, 2011

அறியாமையை உணர்ந்தவன் !

" அறிதொற்றியாமை கண்டற்றால் " என்கிறாரே வள்ளுவர் -- ' அறிதோறும் அறிவு பெற்றற்றால் ' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும் ?
அறியாமையை உணர்ந்தவன்தான் அறிவைத் தேட முடியும் .
நேற்று மூட்டைப் பூச்சிகள் பற்றிய ஒரு கட்டுரை படித்தேன் . அதில் ஓர் அபூர்வத் தகவல் அறிந்தேன் .
காமவெறி கொண்டு ஆண் மூட்டைப் பூச்சி அலையுமாம் . பெண் மூட்டைப்பூச்சியை வசப்படுத்துமாம் . பிறகுதான் தெரியுமாம் . பெண் மூட்டைப் பூச்சிக்குப் பெண்ணுறுப்பே இல்லையென்று . பெண் மூட்டைப் பூச்சியின் பின்பக்கம் பொட்டென்று ஒரு போடு போட்டு அவசரத் துளையை உண்டாக்கிக் கொள்ளுமாம் ஆண் மூட்டைப்பூச்சி .
படித்ததும் யோசிக்க ஆரம்பித்தேன் . மூட்டைப்பூச்சி நம்மைக் கடிக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமே ! எத்தனை மூட்டைப்பூச்சிகள் நம் மீது ' அவசரத்துளை ' போட்டனவோ ? யாரறிவார் ?
அறியும் போதுதான் அறியாமை தெரிகிறது .
--- வைரமுத்து , குமுதம் . 18 . 07. 2007 .

No comments: