Tuesday, March 1, 2011

கோவிலில் வழிபட....

கோயிலுக்குச் செல்வது மனம் ஒன்றி வழிபடவே ! மனம் ஒன்றி வழிபட வேண்டும் என்றால் மெய், வாய், கண், மூக்கு, காது என்ற ஐம்புலன்களும் மனதில் ஒன்றியிருந்து அமைதியாக வழிபடுதல் .
வழிபடும் வேளையில் ஐம்புலன்களை அலைபாய விடாமல் இருந்தால் மனம் ஒன்றி வழிபடலாம் . அதாவது பார்வையை அலைபாய விடுதல், வீண் வம்பு பேச்சுகளைக் கேட்டல், வாச நுகர்ச்சியில் ஈடுபடுதல், வீண் வார்த்தைகளைப் பேசுதல், உடலைத் தேவையின்றி அசைத்தல் ஆகியவற்ரைத் தவிர்க்க வேண்டும் ; முழுமையான தெய்வீக சிந்தனையில் மூழ்கி வழிபட வேண்டும் .
இந்த நவீன யுகத்தில், கோயிலுக்குள் இருக்கும் போதுகூட சிலர் செல்போனில் பேசிக்கொண்டே இருக்கின்றனர் . இதைத் தவிர்க்க வேண்டும் .
--- ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியார் , தினமலர் , ஆகஸ்ட் 12 . 2010.

No comments: