Monday, February 28, 2011

' கவித்துவமான சிந்தனை ! '

' கவித்துவமான சிந்தனைக்கு ஓர் உதாரணம் ? '
" நார்வே பெண் கவிஞர் செல்மாவின் வரி இது ...
' பனிக்கட்டி என்பது தண்ணீரின் சோம்பேறித்தனம் ! ' "
---- ஆனந்தவிகடன் , 11. 8. 10 .
' ப்ராப்தி பலசித்தி ரஸ்து '
அர்ச்சனையின்போது " ப்ராப்தி பலசித்தி ரஸ்து " என்று கூறுவதன் பொருள் :
அர்ச்சனை என்பது மூன்று செயல்பாடுகளை உள்ளடக்கியது . சங்கல்பம் , அர்ச்சனை , பிரசாதம் பெறுதல் .
முதலில் செய்யும் சங்கல்பம் என்பது நாம் எந்த நோக்கத்திற்காக அர்ச்சனை செய்கிறோம் என்று சொல்வது . இதனைக் ' குறிக்கோள் பகருதல் ' என்றும் சொல்லலாம் .
இரண்டாவது இறைவனுக்கு அர்ச்சனை செய்வது, அர்ச்சகர் அர்ச்சனை மந்திரங்களைச் சொல்லிச் செய்யும் பொழுதும், நிவேதனம் தீபாராதனை இவைகளைச் செய்யும்பொழுதும் சுவாமியைக் கண்ணாரக் கண்டு தரிசித்து மனமுருகி வேண்டிக்கொள்ள வேண்டும் .
மூன்றாவது பிரசாதம் பெறுதல் . இதுவே நாம் செய்து கொண்ட சங்கல்பம், அர்ச்சனைகள் இவைகளின் பலனாகும் .
--- ஏ. வி. சுவாமிநாத சிவாச்சாரியர் . தினமலர் , ஆகஸ்ட் 5 . 2010.

No comments: