Saturday, February 26, 2011

தாய்ப்பால் கொடுங்க !

உங்க குழந்தை புத்திசாலியா இருக்கணுமா ? தாய்ப்பால் கொடுங்க !
பிறக்கும் குழந்தையின் முதல் உணவு தாய்ப்பால் . தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்லாது தாய்க்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது !
தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான் அனைத்து சத்துக்களும் இருக்கிறது .
தாய்மார்களின் இரண்டு மார்பகங்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 100 மிலி முதல் 1.5 லிட்டர் வரையில் பாலை உற்பத்தி செய்கின்றன . ரத்தத்தில் உள்ள குளுகோஸ், கால்ஷியம், விட்டமின்கள் ஆகியவற்றை மார்பகச் சிற்றறைகள் பிரித்து பாலாக மாற்றுகின்றன . அதனால் எல்லா சத்துக்களும் அடங்கிய தாய்ப்பால் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .
புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்து கிடைக்காது . ஆனால், தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு விட்டமின் சி சத்தும் தேவையான அளவிற்கு கிடைத்து விடுகிறது .
குழந்தைகள் குறித்து லண்டனில் உள்ள தேசிய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது . அதில், ' குழந்தையின் செரிமான உறுப்புகளைப் பாதுகாக்கும் அதிசய ஆற்றல் படைத்த ஒரு ரசாயனப்பொருள் தாய்ப்பாலில் இருக்கிறது ; குழந்தை பிறந்தவுடன் சுரக்கின்ற முதலில் சீம்பாலில் இது மிக அதிக அளவில் இருக்கிறது ; இந்தப் பொருள் , குழந்தையின் குடல் பகுதிகளை மற்ற அமிலச்சுரப்பிகளினால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்து குழந்தை இனிமேல் சாப்பிடப்போகும் உணவுகளை ஏற்றுக் கொள்ளும் விதமாகப் பக்குவப்படுத்துகிறது ' என்று கண்டறிந்துள்ளனர் . தாய்ப்பாலில் உள்ள அன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள்தான் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன .
--- ராஜி வெங்கடேஷ் , தினமலர் . 7. 8. 2010.

No comments: