Friday, February 25, 2011

ஒரு குட்டிக் கதை ....

போனில், ஒரு சிறுவனுக்கும், வீட்டு உரிமையாளர் பெண்ணிற்கும் இடையே நடக்கும் உரையாடல்....
சிறுவன் : உங்க வீட்டு தோட்டத்தை நான் சுத்தப்படுத்தட்டுமா ?
பெண் : அந்த வேலைக்கு ஏற்கனவே ஒரு பையன் இருக்கிறானே ?
சிறுவன் : அவனை விடக் குறைவா சம்பளம் கொடுத்தா போதும் . நான் நல்லா வேலை செய்வேன் ....
பெண் : வேண்டாம் , அவனே நல்லா வேலை பண்றான் .
சிறுவன் : வீட்டை சுத்தப்படுத்தற வேலை கூட செய்வேன் .
பெண் : வேண்டாம் . அதையும் அவனே நல்லா செய்றான் .
இதன்பின், சிறுவன் ' நன்றி ' என்று கூறி போனை வைக்கிறான் .
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரர், அந்தச் சிறுவனிடம், " வேலை செய்ய வேண்டும் என்ற உன் எண்ணம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . நீ என் கடைக்கு வேலைக்கு வர்றியா ? " என்று கேட்கிறார் .
அதற்கு அந்தச் சிறுவன், " நான் இப்ப போனில் பேசிட்டிருந்த பெண்மணியின் வீட்டில்தான் வேலை செய்யறேண் . நான் செய்யற வேலை அவங்களுக்கு திருப்தி தருதான்னு தெரிஞ்சுக்கத்தான் போன் பண்ணி கேட்டேன் ! " என்று சொல்லிவிட்டு சிட்டாக ஓடி மறைகிறான் அந்த சிறுவன் !
இந்தச் சிறுவன் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு பாடம், நம்மை நாமே ' சுய மதிப்பீடு ' செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் .
--- தினமலர் , 7. 8. 2010.

No comments: