Wednesday, February 23, 2011

பிரெஞ்சு புரட்சி !

பிரெஞ்சு புரட்சியின்போது கொடிய பாஸ்டில் சிறை உடைக்கப்பட்டது . பல வருடங்களாக கை , கால்களில் விலங்குகளோடு வாழ்ந்தவர்கள் , வெளிச்சத்தையே பாராமல் இருட்டில் சிறை வைக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர் . ஆனால் விடுவிக்கப்பட்டவர்களால் வெளியே வாழ முடியவில்லை . வெளிச்சத்தையே அவர்களால் பார்க்க முடியவில்லை . மறுபடியும் சிறைக்குள் வாழவே அவர்கள் அனுமதி கேட்டுக் கெஞ்சினார்கள் . நம்ப முடிகிறதா ? அடிமைகளுக்குத் துயரங்களே வாழ்வாகி விடுகிறது . அவர்கள் எஜமானர்கள் ஆக விரும்புவதே இல்லை !
--- சுகி. சிவம் , தினகரன் இணைப்பு . 7. 8. 2010.

No comments: