Thursday, February 17, 2011

டிப்ஸ் ...

* சிலர் தூக்கமின்மை வியாதியால் கஷ்டப்படுவார்கள் . நல்ல சூரிய ஒளி மேலே படும்படி ( தினம் 30 நிமிடம் ) இருந்தால் நல்ல பலன் கிடைக்கும் . தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் மெலடோனின் ஹார்மோன் சுரக்க இது உதவும் .
* வாழை இலையை சுருட்டி செங்குத்தாக நிமிர்த்தி வைத்தால் நான்கு நாட்கள் ஆனாலும் இலை பழுக்காது .
* தொப்பையைக் குறைக்க விரும்புகிறவர்கள் , உணவு முடிந்ததும் ஐஸ் வாட்டர் குடிக்கக் கூடாது . அது கொழுப்பை உறையச் செய்துவிடும் . ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் அது கொழுப்பை உடலில் தங்க விடாமல் கரைத்துவிடும் .
* நாம் காலையில் வாக்கிங் செல்லும் போது , மௌனமாக பகவான் நாமத்தை ஜபித்துக்கொண்டே நடந்தால் , வேறு சிந்தனை வராது . நடக்கும் சிரமமே தெரியாது . மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும் .
* விளக்குக்குப் பஞ்சுத் திரிக்கும்போது நம் விரல்களில் சிட்டிகை அளவு விபூதி தொட்டு பஞ்சைத் திரிக்கவும் . திரி மெல்லிய இழையாக ஒன்றுகூடி வரும் . திரியும் நன்றாக சுடர் விட்டு எரியும் .
* மருத்துவர்கள் சிறு குழந்தைகளது தொண்டையைப் பரிசோதிக்கும்போது ஸ்பூனுக்குப் பதிலாக , ஒரு லாலிபாப்பை நாக்கில் அழுத்திப் பார்க்கலாம் . குழந்தைகள் அழாமல் நாக்கைக் காட்டும் .
---. மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி

No comments: