Tuesday, February 15, 2011

கொஞ்சம் மொக்கை...படிச்சா பொக்கை!

கொஞ்சம் மொக்கை...படிச்சா பொக்கை!
* மரம் வெட்டிக் களைத்துப் போன மனிதன்
இளைப்பாற தேடினான் ... ஒரு மரத்தின் நிழலை !
* மனுஷனா பொறந்தா சாதிக்கணும்னு சொல்வாங்க .
நல்லவேளை நான் குழந்தையாதான் பொறந்தேன் .
* " உங்களைப் போல நாலு பேரு இருப்பதால்தான் கொஞ்சம் மழை பெய்யுது ! "
" இலலன்னா ? "
" நிறைய பெய்யும் ."
* புலி தூங்கும்போது நீ எழுப்பினாலும் ,
நீ தூங்கும்போது புலி எழுப்பினாலும்
பிரச்னை உனக்குதான் . ( நோ...நோ...அழக்கூடாது ).
* " படியில நிக்காதீங்கப்பா . பஸ் உள்ளதான் கடல் மாதிரி இடம் இருக்குல்ல ..."
" எனக்கு நீச்சல் தெரியாதுங்களே ..."" !!! ? "
!!! ?
* இதயம் .
. உன்னை நான் பார்த்ததும்
இல்லை , என்னை நீ
பார்த்ததும் இல்லை . பின்பு
எதற்காக நான் வாழ நீ
துடிக்கிறாய் ?
* குக்கர் : " நீ ஏன் இவ்வளவு கறுப்பா இருக்கே ?
வாணலி : " நான் இவ்ளோ கறுப்பா இருக்கும்போதே , நீ என்னைப் பார்த்து இப்படி விசில் அடிக்கிற .."
* " ஏங்க இன்னிக்கு குழம்பு வைக்கவா ? ரசம் வைக்கவா ? "
" முத்ல்ல ஏதாவது வை . அப்புறம் அதுக்கு பேரு வெச்சுகலாம் ."
---. மங்கையர் மலர் , ஆகஸ்ட் 2010 . இதழ் உதவி : N . கிரி , ( NEWS AGENT , திருநள்ளாறு .) , கொல்லுமாங்குடி

No comments: