Saturday, February 12, 2011

தெரிந்து கொள்ளுவோம் !

* ' சைக்கோ ' குற்றவாளிகளில் பெரும்பாலானோர் உடலுறவுக்கான சாத்தியம் குறைவானவர்களாகவோ அல்லது அதில் உச்சகட்டத்தை அடைய முடியாதவர்களாகவோதான் இருக்கிறார்கள் ' என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறது அமெரிக்க உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ !
* கடவுளர்கள் , கடவுளின் சீடர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட தங்கள் வாழ்வை பாஸிட்டிவ் க்ளைமாக்ஸுடன் முடித்துக்கொள்ளவில்லை .
* விஷ்ணுவின் அவதாரம் என்று வணங்கப்படும் ராமர் சரயு நதியிலே குதித்து இறக்கிறார் . கிருஷ்ணரோ காற்றிலே திசைமாறி வந்த அம்பினால் சாகிறார் . இயேசு கிறிஸ்துவின் துயர் மிகுந்த மரணம் அனைவரும் அறிந்ததே . தவிர , இயேசுவின் 13 சீடர்களும் கொடூரமான முறையில்தான் இறந்திருக்கின்றனர் !
* ' சூரியன் தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதால் , தற்போதைய அளவை விட 40 சதவிகிதம் அதன் வெப்பம் அதிகரிக்கும் . இதனால் நிலைப்புத்தன்மையை இழக்கும் சூரியனின் நடுவே கறுப்பு நிறத்தில் பெரிய துளை ஏற்பட்டு வெடித்துச் சிதறும் . அதனால் , பூமி அதீத வெப்பத்தினால் கருகி , அழிந்து சிதறிவிடும் . இதுதான் பூமிக்கும் சூரியனுக்குமான க்ளைமாக்ஸ் ' என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் .
* ' சூரியனால்தான் பூமி அழியும் ' என்பது அறிவியல் விதி . ஆனால் , மனிதன்தான் வேகவேகமாக உலக உருண்டையை க்ளைமாக்ஸை நோக்கி உருட்டிக்கொண்டு இருக்கிறான் !
--- , க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .

No comments: