Tuesday, February 8, 2011

செல்போன் ஒட்டுகேட்கும் கருவி !

செல்போன் ஒட்டுகேட்கும் கருவி கண்டுபிடிப்பு . விலை ரூ . 69,000.
செல்போனில் பேசுவதை ஒட்டுகேட்க உதவுவதுடன் அவற்றை பதிவு செய்யும் புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . இதன் விலை ரூ . 69 ஆயிரம் . செல்போன் பேச்சுக்களை இடைமறித்து கேட்க , உதவும் கருவியை அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரை சேர்ந்த கிறிஸ்பேகட் என்ற நிபுணர் கண்டுபிடித்து உள்ளார் . இவர் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி கோடுகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார் . அதன்படி ஜிஎஸ்எம் தொழில்நுட்பம் எவ்வளவு அபாயகரமானது என்பதை விளக்கவே இந்த சாதனத்தை உருவாக்கினேன் . இதன்மூலம் அந்த தொழில்நுட்பம் பயனற்றதாகி விட்டது . இதே போன்ற சாதனத்தை உருவாக்கி கிரிமினல்கள் பயன்படுத்தக்கூடும் . எனவே செல்போன் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான தொழில் நுட்பம் கொண்ட சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் . ஐபோன் , 3ஜி மற்றும் 4ஜி போன்ற நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் போன் மற்றும் ஸ்மார்ட் போனையும் ஒட்டுகேட்க முடியும் என கிறிஸ் பேஜட் தெரிவித்தார் .
--- தினகரன் & தினமலர் . 2 ஆகஸ்ட் , 2010 .

No comments: