Friday, February 4, 2011

போதைப் பொருட்கள் !

இந்தியாவுல அதிகமா உபயோகப்படுத்துறது கஞ்சாதான் , ( Cannabis ) . இது ஒரு செடி . இதை தமிழ்நாடு , கேரளாவுல சில இடங்களில் காட்டுக்குள்ள சட்டத்துக்கு புறம்பா பயிரிடுறாங்க . இதுல இருந்து ஹஷீஷ் . அப்புறம் ஹஷீஷ் எண்ணெய் தயாரிக்கிறாங்க . இதுவும் போதைப்பொருட்கள்தான் . அடுத்து ஒபியம் ( Opium ) . இது பாப்பி ( Poppy ) செடியிலிருந்து கிடைக்கிறது . இது ராஜஸ்தான் , உத்திரபிரதேசம், மத்திய பிரதேசத்தில் பயிரிடுறாங்க .ஆனா , இதை அரசாங்கம் அனுமதி கொடுத்து பயிரிட்டு மருந்துகள் தயாரிக்க விலைக்கு வாங்கிக்கிறாங்க . இதை சட்ட விரோதமா பயிரிட்டுத் தான் இதுல இருந்து ஹீராயின் ( Heroin ) ங்கிற போதிப் பொருளைத் தயார்பண்றாங்க . அடுத்து கோகைன் ( Cocaine ). இது கோகோ செடியில் இருந்து கிடைக்குது . ஆனா, இது நம்ம நாட்டுல பயிரிடுறதில்லை . தென் அமெரிக்க நாடுகளில் இருந்து சட்ட விரோதமா கடத்திக் கொண்டு வந்து மக்களை உபயோகிக்க வைக்கிறாங்க .
இது தவிர , தயாரிக்கப்படுகிற மருந்துகள்ன்னு ( Psychotropic ) சொல்லுவோம் . டயாஸ்பாம் , கல்ப்ராஸோம்னு.... இவைகள் எல்லாம் நோயாளிகளுக்கு கொடுக்குற மருந்துகள் . ஆனா , போதைக்காக சாதாரண மக்கள் பயன்படுத்துறாங்க .
--- R .வெங்கட்டரமணன் . பாடம் , ஜூலை 2010. இதழ் உதவி : செல்லூர் கண்ணன் .

No comments: