Friday, January 28, 2011

தூக்கம் வருவதற்கு !

தூக்கத்தை பீன்ஸ் தரும் . மீன் , யோகர்ட் , கீரையும் உதவும் .
எவ்வளவு காசு , பணம் இருந்தும் தூக்கம் மட்டும் வரவில்லை என்று தவிப்பவரா நீங்க ... !
இரவு உணவில் பீன்ஸ் , யோகர்ட் , மீன் , பசலை கீரை சேர்த்துக் கொள்ளுங்க , உடனே , குறட்டை விட்டு கொர்...கொர்....தான் !
இதை டெல்லியை சேர்ந்த உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் . மேற்கண்ட உணவுகளில் டோகோசஹிசோனிக் என்று ஒரு ரசாயனம் இருக்கிறது . அதை சுருக்கமாக டிஎச்ஏ என்கின்றனர் . தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் மெலாடோனின் என்ற ஹார்மோனை இந்த ரசாயனம் அதிகரிக்கச் செய்கிறதாம் . மீனில் இது அதிகமுள்ளது .
பீன்ஸில் விட்டமின் பி அதிகம் . பி6 , பி12 , போலிக் ஆசிட் ஆகியவையும் உள்ளன . இவை தூக்கத்தை முறைபடுத்தும் . செரோடோனின் என்ற ரிலாக்சுக்கு உதவும் அமிலத்தை தருகின்றன . குறைந்த கொழுப்புள்ள யோகர்ட்டில் கால்ஷியம் , மெக்னீஷியம் உள்ளன . அதை தூக்கத்தை தூண்டும் மினரல்களுக்கு மிக அவசியம் .
அடுத்து பசலைக்கீரை . அதில் அதிக இரும்பு சத்து உள்ளது . தூக்கத்தை தடுக்கும் ரெஸ்ட்லெஸ் லெக்ஸ் சிண்ட்ரோம் என்ற பிரச்னையை இரும்பு சத்து விரட்டி , தூக்கம் கண்களைத் தழுவச் செய்யும் என்கின்றனர் நிபுணர்கள் .
--- தினகரன் , ஜூலை 20 . 2010 .

No comments: