Tuesday, January 25, 2011

தெரியுமா தெரியுமே !*

!* அத்தி , மா , பலா , வாழை , ஆல் , அரசு , வேம்பு , பூவரசு போன்ற மரங்களில் இருக்கும் இலைகளுக்கு மட்டும்தான் இலை என்று பெயர் .* அகத்தி , பசலை , வல்லாரை , முருங்கை போன்றவற்றின் இலகளுக்கு கீரை என்று பெயர் .* அருகு , கோரை முதலியவற்றின் இலைகளுக்கு புல் என்று பெயர் .* உசிலை , சப்பாத்திக்கள்ளி , தாழை இவைகளின் இலைகளுக்கு பெயர் மடல் .* கரும்பு , நாணல் முதலியவற்றின் இலைகளுக்கு தோகை என்று பெயர் .* தென்னை , பனை முதலியவற்றின் இலைகள் , ஓலைகள் என்று சொல்லப்படுகின்றன . ---- தினமலர் , ஜூலை 16 , 2010.

No comments: